என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மலைமுகட்டில் இருந்து மொபைல் மூலம் இந்தியா-பாக். போட்டியை ரசிக்கும் இளைஞர்
Byமாலை மலர்16 Jun 2019 1:02 PM GMT (Updated: 16 Jun 2019 1:02 PM GMT)
இமாச்சல பிரதேசத்தில் கிரிக்கெட் ஆர்வம் உள்ள இளைஞர் ஒருவர் பழத்தோட்டத்தில் வேலை செய்தவாறு மொபைல் போனில் கிரிக்கெட் போட்டியை பார்க்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
குள்ளு:
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் 12-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்த தொடரில் மிகப்பெரிய எதிர்பார்ப்பையும், பேராவலையும் உருவாக்கியுள்ள பரம எதிரிகளான இந்தியா-பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் மான்செஸ்டரில் உள்ள ஓல்டுடிராப்போர்டு மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது.
இப்போட்டியை உலகமெங்கும் கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு பார்த்து வருகின்றனர். இந்தியாவில் இப்போட்டிக்காக பல்வேறு பகுதிகளில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பல்வேறு வணிக வளாகங்களில் பெரிய திரையில் போட்டி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. அங்கு வரும் மக்கள் ஆரவாரத்துடன் போட்டியை கண்டுகளித்து வருகின்றனர்.
இந்நிலையில், இமாச்சல பிரதேசத்தின் குள்ளு மாவட்டத்தில் உள்ள மங்லோர் கிராமத்தில் கிரிக்கெட் ஆர்வம் உள்ள இளைஞர் ஒருவர் பழத்தோட்டத்தில் வேலை செய்தவாறு மொபைல் போனில் இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை பார்க்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X