என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உலககோப்பையை வெல்லப்போவது யார்? டிவில்லியர்ஸ் பதில்
Byமாலை மலர்28 April 2019 4:33 PM GMT (Updated: 28 April 2019 4:33 PM GMT)
ஐ.பி.எல். போட்டியில் விளையாடி வரும் டிவில்லியர்ஸ் உலக கோப்பை வெல்லப்போது யார்? என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ளார். #WorldCup2019 #ABdeVilliers
புதுடெல்லி:
12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி மே மாதம் 30-ந்தேதி முதல் ஜூலை 14-ந்தேதி வரை இங்கிலாந்தில் நடக்கிறது.
இதில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், இலங்கை, நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 10 நாடுகள் பங்கேற்கின்றன.
தென்ஆப்பிரிக்காவை சேர்ந்த அதிரடி பேட்ஸ்மேன் டிவில்லியர்ஸ் உலககோப்பை போட்டியில் ஆடமாட்டார். சர்வதேச போட்டிகளில் இருந்து அவர் ஏற்கனவே ஓய்வு பெற்று விட்டார். சிறந்த அதிரடி வீரரான அவர் இந்த உலககோப்பையில் இல்லாதது ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றமே.
ஐ.பி.எல். போட்டியில் விளையாடி வரும் டிவில்லியர்ஸ் உலக கோப்பை வெல்லப்போது யார்? என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
நான் கடந்த ஆண்டு ஓய்வு முடிவை அறிவித்தேன். 100 சதவீத திருப்தியுடன் இந்த முடிவை எடுத்தேன்.
உலககோப்பையில் மீண்டும் விளையாட ஆர்வமாகவே இருந்தேன். ஆனாலும் ஓய்வு முடிவு மகிழ்ச்சியானதே. ஓய்வு முடிவை எடுத்ததற்காக நான் வருத்தம் எதுவும் படவில்லை.
உலககோப்பையை வெல்லப்போவது யார்? என்று கணிப்பது கடினம். ஏனென்றால் பல அணிகளும் திறமையுடன் உள்ளன.
இந்தியா, பாகிஸ்தான் அணிகள் சாம்பியன்ஸ் டிராபியை வென்றுள்ளார்கள். இங்கிலாந்து சொந்த மண்ணில் ஆடுகிறது. நியூசிலாந்து எப்போதுமே உலககோப்பையில் நன்றாக ஆடும். தென்ஆப்பிரிக்கா அணியின் வேகப்பந்து வீச்சு பலம் வாய்ந்து காணப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார். #WorldCup2019 #ABdeVilliers
12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி மே மாதம் 30-ந்தேதி முதல் ஜூலை 14-ந்தேதி வரை இங்கிலாந்தில் நடக்கிறது.
இதில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், இலங்கை, நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 10 நாடுகள் பங்கேற்கின்றன.
தென்ஆப்பிரிக்காவை சேர்ந்த அதிரடி பேட்ஸ்மேன் டிவில்லியர்ஸ் உலககோப்பை போட்டியில் ஆடமாட்டார். சர்வதேச போட்டிகளில் இருந்து அவர் ஏற்கனவே ஓய்வு பெற்று விட்டார். சிறந்த அதிரடி வீரரான அவர் இந்த உலககோப்பையில் இல்லாதது ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றமே.
ஐ.பி.எல். போட்டியில் விளையாடி வரும் டிவில்லியர்ஸ் உலக கோப்பை வெல்லப்போது யார்? என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
நான் கடந்த ஆண்டு ஓய்வு முடிவை அறிவித்தேன். 100 சதவீத திருப்தியுடன் இந்த முடிவை எடுத்தேன்.
உலககோப்பையில் மீண்டும் விளையாட ஆர்வமாகவே இருந்தேன். ஆனாலும் ஓய்வு முடிவு மகிழ்ச்சியானதே. ஓய்வு முடிவை எடுத்ததற்காக நான் வருத்தம் எதுவும் படவில்லை.
உலககோப்பையை வெல்லப்போவது யார்? என்று கணிப்பது கடினம். ஏனென்றால் பல அணிகளும் திறமையுடன் உள்ளன.
இந்தியா, பாகிஸ்தான் அணிகள் சாம்பியன்ஸ் டிராபியை வென்றுள்ளார்கள். இங்கிலாந்து சொந்த மண்ணில் ஆடுகிறது. நியூசிலாந்து எப்போதுமே உலககோப்பையில் நன்றாக ஆடும். தென்ஆப்பிரிக்கா அணியின் வேகப்பந்து வீச்சு பலம் வாய்ந்து காணப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார். #WorldCup2019 #ABdeVilliers
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X