என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
‘நம்பர் 4’ மர்மத்தை தீர்த்துவிட்டார் அம்பதி ராயுடு- உலகக்கோப்பை வரை எந்த பேச்சும் இருக்காது- ரோகித் சர்மா
Byமாலை மலர்30 Oct 2018 2:20 PM GMT (Updated: 30 Oct 2018 2:20 PM GMT)
அம்பதி ராயுடு நம்பர் 4 என்ற மர்மத்தை தீர்த்துவிட்டார், இனிமேல் அதுபற்றி உலகக்கோப்பை வரை எந்த பேச்சும் இருக்காது என ரோகித் சர்மா நம்பிக்கை தெரிவித்துள்ளார். #RohitSharma
இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணி உலகக்கோப்பைக்கு தயார்படுத்தி வருகிறது. 4-வது வரிசையில் களம் இறங்கி விளையாடுவதற்கு இதுவரை நிலையான பேட்ஸ்மேன் அமையவில்லை. இந்தியா ஏராளமான வீரர்களுக்கு வாய்ப்ப வழங்கியது.
இந்நிலையில்தான் வெஸ்ட் இண்டீஸ் தொடர் தொடங்கியபோது அம்பதி ராயுடு 4-வது இடத்திற்கு சரியான நபராக இருப்பார். அவருக்கு உலகக்கோப்பை வரை ஏராளமான வாய்ப்புகள் வழங்கப்படும் என்று கேப்டன் விராட் கோலி கூறியிருந்தார்.
நேற்று நடைபெற்ற 4-வது போட்டியில் ரோகித் சர்மா உடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 80 பந்தில சதம் அடித்தார். ரோகித் சர்மாவுடன் இணைந்து 200 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் கொடுத்தார்.
ரோகித் சர்மா 162 ரன்கள் குவித்து ஆட்ட நாயகன் விருது பெற்றார். இந்திய அணியில் நீண்ட நாட்களாக நம்பர் 5 மர்மமாகவே இருந்து வந்தது. இந்நிலையில் அம்பதி ராயுடு அதை தீர்த்துவிட்டார் என்று ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ரோகித் சர்மா கூறுகையில் ‘‘மும்பை போட்டியில் அம்பதி ராயுடு சதம் அடித்தது மிகவும் முக்கியமானது. நம்பர் 4 என்ற மர்மத்தை அவர் தீர்த்துவிட்டார். உலகக்கோப்பை வரை நம்பர் 4 பற்றி யாரும் பேசமாட்டார்கள்’’ என்றார்.
இந்நிலையில்தான் வெஸ்ட் இண்டீஸ் தொடர் தொடங்கியபோது அம்பதி ராயுடு 4-வது இடத்திற்கு சரியான நபராக இருப்பார். அவருக்கு உலகக்கோப்பை வரை ஏராளமான வாய்ப்புகள் வழங்கப்படும் என்று கேப்டன் விராட் கோலி கூறியிருந்தார்.
நேற்று நடைபெற்ற 4-வது போட்டியில் ரோகித் சர்மா உடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 80 பந்தில சதம் அடித்தார். ரோகித் சர்மாவுடன் இணைந்து 200 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் கொடுத்தார்.
ரோகித் சர்மா 162 ரன்கள் குவித்து ஆட்ட நாயகன் விருது பெற்றார். இந்திய அணியில் நீண்ட நாட்களாக நம்பர் 5 மர்மமாகவே இருந்து வந்தது. இந்நிலையில் அம்பதி ராயுடு அதை தீர்த்துவிட்டார் என்று ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ரோகித் சர்மா கூறுகையில் ‘‘மும்பை போட்டியில் அம்பதி ராயுடு சதம் அடித்தது மிகவும் முக்கியமானது. நம்பர் 4 என்ற மர்மத்தை அவர் தீர்த்துவிட்டார். உலகக்கோப்பை வரை நம்பர் 4 பற்றி யாரும் பேசமாட்டார்கள்’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X