என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காமன்வெல்த் போட்டிக்கு வந்த 50 பேரை காணவில்லை- வலைவீசி தேடுகிறது ஆஸ்திரேலியா
Byமாலை மலர்22 May 2018 12:37 PM GMT (Updated: 22 May 2018 12:37 PM GMT)
காமன்வெல்த் போட்டிக்காக கோல்டு கோஸ்ட் சென்றவர்களில் 50 பேரை காணவில்லை என்றும், அவர்களை தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் கடந்த மாதம் 4-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை காமன்வெல்த் கேம்ஸ் நடைபெற்றது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 6600 வீரர்கள் மற்றும் அணி பயிற்சியாளர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இவர்கள் தொடர் முடிந்தவுடன் சொந்த நாடு திரும்பினார்கள். ஆனால், சிலர் இன்னும் சொந்த நாடு திரும்பவில்லை. அவர்கள் ஆஸ்திரேலியாவில் சுற்றிக் கொண்டிருக்கலாம். அதேபோல் சிலர் ஆஸ்திரேலியாவில் தஞ்சமடை கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து ஆஸ்திரேலியாவின் உள்நாட்டு விவகாரத்துறை மந்திரி டுட்டோன் கூறுகையில் ‘‘கோல்டு கோஸ்ட் காமன்வெல்த் போட்டிக்கு வந்தவர்களில் 190 பேர் அகதிகள் விசா கேட்டுள்ளார்கள். 50 பேரை காணவில்லை. அவர்களை தேடும்பணி நடைபெற்று வருகிறது. அவர்களை கண்டுபிடித்து, குடியேற்ற தடுப்புக்காவலில் வைத்து, நாடு கடத்தப்படுவார்கள்’’ என்றார்.
காமன்வெல்த் போட்டிக்கு செல்பவர்கள் மாயமாவது இது புதிதல்ல. 2006-ம் அண்டு மெல்போர்ன் 2002 மான்செஸ்டர், 2014 கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டிகளில் கலந்து கொண்டவர்களும் டஜன் கணக்கில் மாயமானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.ustralia Searching for 50 Athletes Officials Missing After Commonwealth Games
இவர்கள் தொடர் முடிந்தவுடன் சொந்த நாடு திரும்பினார்கள். ஆனால், சிலர் இன்னும் சொந்த நாடு திரும்பவில்லை. அவர்கள் ஆஸ்திரேலியாவில் சுற்றிக் கொண்டிருக்கலாம். அதேபோல் சிலர் ஆஸ்திரேலியாவில் தஞ்சமடை கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து ஆஸ்திரேலியாவின் உள்நாட்டு விவகாரத்துறை மந்திரி டுட்டோன் கூறுகையில் ‘‘கோல்டு கோஸ்ட் காமன்வெல்த் போட்டிக்கு வந்தவர்களில் 190 பேர் அகதிகள் விசா கேட்டுள்ளார்கள். 50 பேரை காணவில்லை. அவர்களை தேடும்பணி நடைபெற்று வருகிறது. அவர்களை கண்டுபிடித்து, குடியேற்ற தடுப்புக்காவலில் வைத்து, நாடு கடத்தப்படுவார்கள்’’ என்றார்.
காமன்வெல்த் போட்டிக்கு செல்பவர்கள் மாயமாவது இது புதிதல்ல. 2006-ம் அண்டு மெல்போர்ன் 2002 மான்செஸ்டர், 2014 கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டிகளில் கலந்து கொண்டவர்களும் டஜன் கணக்கில் மாயமானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.ustralia Searching for 50 Athletes Officials Missing After Commonwealth Games
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X