என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஐபிஎல் 2018- கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு 159 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது ராஜஸ்தான் ராயல்ஸ்
Byமாலை மலர்8 May 2018 4:12 PM GMT (Updated: 8 May 2018 4:12 PM GMT)
ஜோஸ் பட்லரின் அதிரடி ஆட்டத்தால் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு 159 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது ராஜஸ்தான் ராயல்ஸ். #IPL2018 #RRvKXIP
ஐபிஎல் தொடரின் 40-வது லீக் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் 18 வயதான மஹிபால் லாம்ரோர் அறிமுகமானார்.
அந்த அணியின் ரகானே, ஜோஸ் பட்லர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ரகானே 9 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கிருஷ்ணப்பா கவுதம் 8 ரன்னில் வெளியேறினார்.
ஒருபுறம் விக்கெட் வீழ்ந்தாலும் மறுமுனையில் பட்லர் அதிரடியாக விளையாடி 58 பந்தில் 9 பவுண்டரி, 1 சிக்சருடன் 82 ரன்கள் குவித்தார். சஞ்சு சாம்சன் 22 ரன்னும், ஸ்டூவர்ட் பின்னி 11 ரன்னும், பென் ஸ்டோக்ஸ் 14 ரன்னும் அடிக்க ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவரில் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்தது.
இதனால் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் வெற்றிக்கு 159 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி சார்பில் அன்ட்ரிவ் டை நான்கு விக்கெட்டுக்கள் கைப்பற்றினார்.
அந்த அணியின் ரகானே, ஜோஸ் பட்லர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ரகானே 9 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கிருஷ்ணப்பா கவுதம் 8 ரன்னில் வெளியேறினார்.
ஒருபுறம் விக்கெட் வீழ்ந்தாலும் மறுமுனையில் பட்லர் அதிரடியாக விளையாடி 58 பந்தில் 9 பவுண்டரி, 1 சிக்சருடன் 82 ரன்கள் குவித்தார். சஞ்சு சாம்சன் 22 ரன்னும், ஸ்டூவர்ட் பின்னி 11 ரன்னும், பென் ஸ்டோக்ஸ் 14 ரன்னும் அடிக்க ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவரில் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்தது.
இதனால் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் வெற்றிக்கு 159 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி சார்பில் அன்ட்ரிவ் டை நான்கு விக்கெட்டுக்கள் கைப்பற்றினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X