search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    துலீப் டிராபி இறுதிப் போட்டி: வலுவான நிலையில் இந்தியா ரெட்
    X

    துலீப் டிராபி இறுதிப் போட்டி: வலுவான நிலையில் இந்தியா ரெட்

    துலீப் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியா ப்ளூ அணிக்கெதிராக 371 ரன்கள் முன்னிலைப் பெற்று வலுவான நிலையில் உள்ளது இந்தியா ரெட்.
    இந்தியா ரெட் - இந்தியா ப்ளூ அணிகளுக்கு இடையிலான துலீப் டிராபி இறுதிப் போட்டி லக்னோவில் நடைபெற்று வருகிறது.

    பகல் - இரவு ஆட்டமாக கடந்த 25-ந்தேதி தொடங்கிய இந்தப் போட்டியில் இந்தியா ரெட் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. ப்ரித்வி ஷா (154), கேப்டன் தினேஷ் கார்த்திக் (111) மற்றும் வாஷிங்டன் சுந்தர் (88) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் இந்தியா ரெட் முதல் இன்னிங்சில் 483 ரன்கள் குவித்தது.

    பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா ப்ளூ அணி 299 ரன்களில் ஆல்அவுட் ஆனது. தொடக்க வீரர் ஈஸ்வரன் (127), 7-வது வீரர் உனத்கட் (83) ஆகியோர் சிறப்பாக விளையாடிய போதிலும் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினார்கள். இந்தியா ரெட் அணி சார்பில் கோஹில் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தலா ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.

    184 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா ரெட் அணி, சுழற்பந்து வீச்சில் திணறியது. தொடக்க வீரர் ப்ரித்வி ஷா 31 ரன்கள் எடுத்தார். அடுத்த வந்த ஹெர்வாத்கர் (8), ஜக்கி (3), தினேஷ் கார்த்திக் (9) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர்.



    ஆனால் பாபா இந்திரஜித் 59 ரன்கள் எடுத்து அணிக்கு வலு சேர்த்தார். வாஷிங்டன் சுந்தர் சிறப்பாக விளையாடி நேற்றைய 3-வது நாள் ஆட்டம் முடியும் வரை அவுட்டாகாமல் அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.

    நேற்றைய 3-வது நாள் ஆட்டம் முடியும் வரை இந்தியா ரெட் 7 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் எடுத்துள்ளது. வாஷிங்டன் சுந்தர் 42 ரன்னுடனும், கவுல் 5 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

    தற்போது வரை இந்தியா ப்ளூ 371 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. இன்றைய ஆட்டத்தில் மேலும் ரன்கள் சேர்த்து 400 ரன்களுக்கு மேல் இலக்கு நிர்ணயித்தால் இந்தியா ரெட் வெற்றி பெற வாய்ப்புள்ளது.
    Next Story
    ×