search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டி.என்.பி.எல். கிரிக்கெட்: காயம் காரணமாக 2 வீரர்கள் விலகல்
    X

    டி.என்.பி.எல். கிரிக்கெட்: காயம் காரணமாக 2 வீரர்கள் விலகல்

    தமிழ்நாடு பிரிமீயர் லீக் 20 ஓவர் போட்டியில் பங்கேற்றுள்ள மாருதி ராகவ் மற்றும் ஷிக்கர் ஹூக்கு ஆகிய வீரர்கள் காயம் காரணமாக இந்த போட்டி தொடரில் இருந்து விலகி உள்ளனர்.
    சென்னை :

    2-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் போட்டியில் பங்கேற்றுள்ள தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணியில் இடம் பிடித்து இருந்த மாருதி ராகவ் மற்றும் காரைக்குடி காளை அணியில் இடம் பெற்று இருந்த ஷிக்கர் ஹூக்கு ஆகிய வீரர்கள் காயம் காரணமாக இந்த போட்டி தொடரில் இருந்து விலகி உள்ளனர்.

    மாருதி ராகவ்க்கு பதிலாக தொடக்க ஆட்டக்காரரும், ஆல்-ரவுண்டருமான சந்தோஷ் ஷிவ் தூத்துக்குடி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஷிக்கருக்கு பதிலாக வலது கை பேட்ஸ்மேனும், சுழற்பந்து வீச்சாளருமான எஸ்.சுவாமிநாதன் காரைக்கடி அணியில் இடம் பிடித்துள்ளார்.
    Next Story
    ×