என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சாம்பியன்ஸ் டிராபி: பயிற்சியில் ஈடுபடாத யுவராஜ் சிங்; நாளை களம் இறங்குவாரா?
Byமாலை மலர்27 May 2017 10:07 AM GMT (Updated: 27 May 2017 10:07 AM GMT)
சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான பயிற்சி ஆட்டத்தில் நாளை நியூசிலாந்து அணிக்கெதிராக யுவராஜ் சிங் களம் இறங்குவாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடுவதற்கான இந்திய அணி இங்கிலாந்து சென்றுள்ளது. இந்த தொடர் ஜூன் 1-ந்தேதி தொடங்குகிறது. இந்திய 4-ந்தேதி தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இதற்கு முன்னோட்டமாக இந்தியா, நியூசிலாந்து மற்றும் வங்காள தேசம் அணிகளுக்கு எதிராக பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது.
நாளை நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது. 30-ந்தேதி வங்காள தேசத்தை எதிர்கொள்கிறது. இதற்காக இந்திய அணி லண்டன் லார்ட்ஸில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்த பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணியின் இடது கை அனுபவ பேட்ஸ்மேன் யுவராஜ் சிங் பங்கேற்கவில்லை.
பயிற்சிக்கு தயாராகும் டோனி, ரகானே
அவருக்கு சற்று உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் பயிற்சியில் பங்கேற்கவில்லை. ஆனால், நாளை நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் அவர் நிச்சயம் பங்கேற்பார் என்று இந்திய அணி நிர்வாகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
ஒருவேளை யுவராஜ் சிங்கின் உடல்நலம் சரியாகவில்லை என்றால் அது இந்திய அணிக்கு பின்னடைவாக இருக்கும். டோனி மற்றும் யுவராஜ் சிங்கின் அனுபவம் இந்திய அணிக்கு உதவிகரமாக இருக்கும் என்று விராட் கோலி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
யுவராஜ் சிங் பயிற்சியில் ஈடுபடாத நிலையில், டோனி, விராட் கோலி, ரகானே ஆகியோர் பயிற்சியில் ஈடுபட்டனர்.
நாளை நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது. 30-ந்தேதி வங்காள தேசத்தை எதிர்கொள்கிறது. இதற்காக இந்திய அணி லண்டன் லார்ட்ஸில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்த பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணியின் இடது கை அனுபவ பேட்ஸ்மேன் யுவராஜ் சிங் பங்கேற்கவில்லை.
பயிற்சிக்கு தயாராகும் டோனி, ரகானே
அவருக்கு சற்று உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் பயிற்சியில் பங்கேற்கவில்லை. ஆனால், நாளை நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் அவர் நிச்சயம் பங்கேற்பார் என்று இந்திய அணி நிர்வாகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
ஒருவேளை யுவராஜ் சிங்கின் உடல்நலம் சரியாகவில்லை என்றால் அது இந்திய அணிக்கு பின்னடைவாக இருக்கும். டோனி மற்றும் யுவராஜ் சிங்கின் அனுபவம் இந்திய அணிக்கு உதவிகரமாக இருக்கும் என்று விராட் கோலி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
யுவராஜ் சிங் பயிற்சியில் ஈடுபடாத நிலையில், டோனி, விராட் கோலி, ரகானே ஆகியோர் பயிற்சியில் ஈடுபட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X