என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
ஆபத்தான முறையில் பைக் ஓட்டிய சிறுவர்கள்
- சிறுவன் ஹெல்மெட் அணியாமல் கியர் போட்டு மோட்டார் சைக்கிளை இயக்குவதும், பின்னால் மற்றொரு சிறுவன் ஏறி செல்வது போன்ற காட்சிகள் உள்ளன.
- வீடியோ 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்ற நிலையில் பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
நகரங்கள் முதல் கிராமங்கள் வரை சிறுவர்கள் இருசக்கர வாகனங்களை ஓட்டி செல்வதும், விபத்தில் சிக்குவதும் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க போலீசார் விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, சிறுவர்களை வாகனம் ஓட்ட அனுமதிக்கும் பெற்றோர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து வருகின்றனர்.
இந்நிலையில் 12 வயதிற்குட்பட்ட சிறுவன் ஒருவன் ஹெல்மெட் அணியாமல் ஆபத்தான நிலையில் இருசக்கர வாகனத்தை ஓட்டி செல்லும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. போலீஸ் அதிகாரியான பங்கஜ் நைன் என்பவர் எக்ஸ் தளத்தில் இது தொடர்பான வீடியோவை பதிவிட்டார். அதில் 2 சிறுவர்கள் கவனக்குறைவாக மோட்டார் சைக்கிள் ஓட்டும் காட்சிகள் உள்ளது.
அதில் ஒரு சிறுவன் ஹெல்மெட் அணியாமல் கியர் போட்டு மோட்டார் சைக்கிளை இயக்குவதும், பின்னால் மற்றொரு சிறுவன் ஏறி செல்வது போன்ற காட்சிகள் உள்ளன. வீடியோவுடன் அவரது பதிவில், இதை விட ஆபத்து என்ன இருக்க முடியும். பெற்றோர்களே தயவு செய்து உங்கள் அன்புக்குரியவர்களை கவனித்து கொள்ளுங்கள். இந்த உயிர்கள் விலை மதிப்பற்றவை என கூறியுள்ளார்.
அவரது இந்த வீடியோ 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்ற நிலையில் பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
What can be more dangerous than this !!!
— Pankaj Nain IPS (@ipspankajnain) April 22, 2024
Parents , pls take care of your loved ones .
These lives are precious ? pic.twitter.com/ydL4hkNoKX
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்