search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய உக்ரைன் வெளியுறவு மந்திரி
    X

    காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய உக்ரைன் வெளியுறவு மந்திரி

    • உக்ரைன் வெளியுறவுத்துறை மந்திரி டிமிட்ரோ குலேபா இன்று இந்தியா வந்தடைந்தார்.
    • டெல்லி வந்த டிமிட்ரோ குலேபா காந்தி நினைவிடம் சென்று அஞ்சலி செலுத்தினார்.

    புதுடெல்லி:

    உக்ரைன் வெளியுறவுத்துறை மந்திரி டிமிட்ரோ குலேபா 2 நாள் பயணமாக இன்று இந்தியா வந்தடைந்தார்.

    இந்நிலையில், டெல்லி வந்தடைந்த டிமிட்ரோ குலேபா ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்தினார்.

    தனது பயணத்தில் இந்திய வெளியுறவு மந்திரி மற்றும் பிறருடன் இருதரப்பு உறவுகள் தொடர்பான விஷயங்களைப் பற்றி விவாதிக்க உள்ளார்.

    வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரின் அழைப்பின் பேரில் அவர் வருகை தந்துள்ளார் என வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    Next Story
    ×