search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஆலப்புழாவில் சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்து- நீந்தி கரை சேர்ந்த 3 தமிழர்கள்
    X

    ஆலப்புழாவில் சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்து- நீந்தி கரை சேர்ந்த 3 தமிழர்கள்

    • கேரள மாநிலம் ஆலப்புழாவில் சொகுசு சுற்றுலா படகு போக்குவரத்து நடைபெற்று வருகிறது.
    • ஏரிக்குள் விழுந்த அவர்களது பைகளை மீட்கவே பிரசன்னன் ஏரியில் குதித்துள்ளார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் ஆலப்புழாவில் சொகுசு சுற்றுலா படகு போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்தியாவின் பல மாநில மக்களும் இங்கு வந்து படகில் செல்வது உண்டு.

    நேற்று நடைபெற்ற படகு சவாரியில் பள்ளத்துருத்தியைச் சேர்ந்த வளட்டுதாரா பிரசன்னன் (வயது 52) உள்பட பலர் பங்கு பெற்றனர். அதிகாலை 4:30 மணிக்கு அவர்கள் படகில் சென்றனர்.

    அப்போது எதிர்பாராதவிதமாக படகு மூழ்கியது. இதில் பிரசன்னன் நீரில் மூழ்கி பலியானார். 3 சுற்றுலா பயணிகள் தண்ணீரில் நீந்தி கரைக்கு வந்தனர். அவர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்தது.

    ஏரிக்குள் விழுந்த அவர்களது பைகளை மீட்கவே பிரசன்னன் ஏரியில் குதித்துள்ளார். ஆனால் அவர் பரிதாபமாக இறந்துவிட்டார். அவரது உடலை தீயணைப்பு துறையினர் மீட்டனர்.

    Next Story
    ×