என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
ஆலப்புழாவில் சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்து- நீந்தி கரை சேர்ந்த 3 தமிழர்கள்
BySuresh K Jangir12 Jun 2022 9:11 AM GMT (Updated: 12 Jun 2022 9:12 AM GMT)
- கேரள மாநிலம் ஆலப்புழாவில் சொகுசு சுற்றுலா படகு போக்குவரத்து நடைபெற்று வருகிறது.
- ஏரிக்குள் விழுந்த அவர்களது பைகளை மீட்கவே பிரசன்னன் ஏரியில் குதித்துள்ளார்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் ஆலப்புழாவில் சொகுசு சுற்றுலா படகு போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்தியாவின் பல மாநில மக்களும் இங்கு வந்து படகில் செல்வது உண்டு.
நேற்று நடைபெற்ற படகு சவாரியில் பள்ளத்துருத்தியைச் சேர்ந்த வளட்டுதாரா பிரசன்னன் (வயது 52) உள்பட பலர் பங்கு பெற்றனர். அதிகாலை 4:30 மணிக்கு அவர்கள் படகில் சென்றனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக படகு மூழ்கியது. இதில் பிரசன்னன் நீரில் மூழ்கி பலியானார். 3 சுற்றுலா பயணிகள் தண்ணீரில் நீந்தி கரைக்கு வந்தனர். அவர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்தது.
ஏரிக்குள் விழுந்த அவர்களது பைகளை மீட்கவே பிரசன்னன் ஏரியில் குதித்துள்ளார். ஆனால் அவர் பரிதாபமாக இறந்துவிட்டார். அவரது உடலை தீயணைப்பு துறையினர் மீட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X