என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
பக்தர்கள் முன்பணம் குறித்து அவதூறு பரப்புவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்- தேவஸ்தானம் எச்சரிக்கை
- மாநில அரசு தேவஸ்தானத்தை பயன்படுத்துவதாக குற்றம்சாட்டுவது வருந்தத்தக்கது.
- உண்மைகளை சரிபார்க்காமல் பொய்யை பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருப்பதி:
திருப்பதியில் வாடகை அறை முன்பதிவிற்காக பெறப்படும் முன்பணத் தொகையை மாநில அரசு பயன்படுத்துவதாகவும், அதனால்தான் பக்தர்கள் கணக்கில் தாமதமாகச் சென்றடைவதாகவும் சிலர் தவறான தகவல்களைப் பரப்பி வருகின்றனர் என்றும், இதுபோன்ற பொய்யான தகவல்களை நம்ப வேண்டாம் என்றும் தேவஸ்தானம் கேட்டுக் கொண்டுள்ளது.
இந்த விவகாரத்தில் அவதூறு பிரசாரம் செய்ததாக தெலுங்கு தேச எம்.எல்.சி. பி.டெக் ரவி மீது திருப்பதி தேவஸ்தானம் அதிகாரிகள் திருமலை 2-வது போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
திருமலைக்கு வரும் பக்தர்கள் கரண்ட் புக்கிங் மற்றும் ஆன்லைன் புக்கிங் முறையில் வாடகை அறைகளை முன்பதிவு செய்து வருகின்றனர். தரிசனம் முடித்து அறைகளைக் காலி செய்த பிறகு, அவற்றுக்கான முன்வைப்புத் தொகையை திரும்பப் பெறுவதற்கான தகுதி அறிக்கையானது அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளான ஃபெடரல் வங்கி அல்லது எச்டிஎப்சி வங்கிக்கு அன்று மாலை 3 மணிக்குள் அனுப்பப்படும்.
இந்த வங்கிகளின் அதிகாரிகள் அதே நாளில் (வங்கி வேலை நாள்களில்) நள்ளிரவு 12 மணிக்குள் சம்பந்தப்பட்ட வணிக சேவைகளுக்கு அனுப்புவார்கள். வணிக சேவைகள் அடுத்த நாள் வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தும். வாடிக்கையாளரின் வங்கி தொடர்புடைய தொகையை உறுதிப்படுத்தும் செய்தியையும் (ஏஆர் எண்) பணத்தையும் அந்தந்த பக்தரின் கணக்குக்கு அனுப்புகிறது.
வங்கியின் மூலம் வாடிக்கையாளரின் கணக்கில் பணம் செலுத்துவதில் தாமதம் ஏற்படுவதை தேவஸ்தானம் கவனித்துள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளின்படி, 7 வங்கி வேலை நாள்களுக்குள் பாதுகாப்பு வைப்புத் தொகையைத் திரும்பப் பெற வேண்டும். இந்த ஆண்டு, ஜூலை 11 முதல், தேவஸ்தான யுசிஐ முறையில் பணம் திரும்பப் பெறப்படுகிறது.
இதனால் பணம் 4, 5 நாள்களில் திரும்பப் பெறப்படும். இதன் படி, பக்தர்கள் வங்கிக் கணக்கில் நேரடியாகப் பணம் செலுத்தப்பட்டு வருகிறது.
இதற்கிடையில், பாதுகாப்பு வைப்புத்தொகை குறித்தும் தேவஸ்தானம் குறித்தும் சிலர் அவதூறு பிரசாரம் செய்வது நல்லதல்ல. உண்மையில், ரொக்க டெபாசிட் தொகை நேரடியாக பக்தர்களின் கணக்கில் செல்கிறது.
மாநில அரசு தேவஸ்தானத்தை பயன்படுத்துவதாக குற்றம்சாட்டுவது வருந்தத்தக்கது. உண்மைகளை சரிபார்க்காமல் பொய்யை பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்