search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    உடலுக்குள் மறைத்து வைத்து ரூ.49 லட்சம் தங்கம் கடத்திய பயணி
    X

    உடலுக்குள் மறைத்து வைத்து ரூ.49 லட்சம் தங்கம் கடத்திய பயணி

    • கண்ணூர் விமான நிலையத்துக்கு ஷார்ஜாவில் இருந்து வந்த விமான பயணிகளிடம் சோதனை நடத்தப்பட்டது.
    • விமான நிலைய போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் உள்ள விமான நிலையங்களில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன. அரபு நாடுகளில் இருந்து வரும் விமானங்களில் சில பயணிகள் சட்டவிரோதமாக தங்கத்தை மறைத்துவைத்து கடத்தி கொண்டுவரும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. கண்ணூர் விமான நிலையத்துக்கு ஷார்ஜாவில் இருந்து வந்த விமான பயணிகளிடம் சோதனை நடத்தப்பட்டது.

    அப்போது முஸ்தபா என்ற பயணி 832 கிராம் தங்கத்தை பேஸ்ட் வடிவில் கேப்சூல்களுக்குள் வைத்து, அதனை விழுங்கி வயிற்றுக்குள் மறைத்துவைத்து கடத்தி கொண்டுவந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றின் மதிப்பு ரூ.49லட்சம் ஆகும். இதுதொடர்பாக விமான நிலைய போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×