search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கர்நாடகா கோர்ட்டில் மனைவியின் தொண்டையை கத்தியால் அறுத்து கொன்ற கணவன்
    X

    கர்நாடகா கோர்ட்டில் மனைவியின் தொண்டையை கத்தியால் அறுத்து கொன்ற கணவன்

    • சிவக்குமார் திடீரென கையில் வைத்திருந்த கத்தியால் மனைவியின் தொண்டையை அறுத்தார். இதனால் ரத்த வெள்ளத்தில் சித்ரா கீழே விழுந்தார்.
    • மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சித்ரா சிகிச்சை பலன் இல்லாமல் இறந்தார்.

    பெங்களூரு:

    கர்நாடகா மாநிலம் ஹாசன் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மனைவி சித்ரா. இவர்களுக்கு திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகிறது.

    இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடால் பிரிந்து வாழ்கிறார்கள்.

    இருவரும் விவாகரத்து கேட்டு அங்குள்ள குடும்பநல கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். இருவரும் சேர்ந்து வாழுமாறு நீதிபதி அவர்களிடம் அறிவுறுத்தினார். இதை ஏற்று அவர்கள் மீண்டும் சேர்ந்து வாழ முடிவு செய்தனர். கவுன்சிலிங் ஆலோசனைக்கு பிறகு சித்ரா கழிப்பறைக்கு சென்றார். அப்போது பின்னால் சென்ற சிவக்குமார் திடீரென கையில் வைத்திருந்த கத்தியால் மனைவியின் தொண்டையை அறுத்தார். இதனால் ரத்த வெள்ளத்தில் சித்ரா கீழே விழுந்தார்.

    மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் சிகிச்சை பலன் இல்லாமல் இறந்தார். தப்பியோட முயன்றபோது சிவக்குமார் அங்கு இருந்தவர்களால் தாக்கப்பட்டார். இந்த சம்பவம் குடும்பநல கோர்ட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×