search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சமூக வலைதளம் மூலம் 15 வருட தோழியை தேடி பிடித்த பெண்
    X

    சமூக வலைதளம் மூலம் 15 வருட தோழியை தேடி பிடித்த பெண்

    • வேதிகா என்ற பெண் லிங்க்டு-இன் வலைதளத்தில் தன்னுடைய பழைய தோழிகளை தேடி உள்ளார்.
    • வேதிகாவின் பதிவு 4 லட்சத்துக்கும் அதிகமான பார்வைகளை குவித்து வருகிறது.

    தற்போதைய காலத்தில் சமூக வலைதளங்களை பயன்படுத்தாதவர்களே இல்லை என்ற நிலை உள்ளது. சமூக வலைதளங்கள் மூலம் ஒரு பெண் தனது 15 வருட தோழியை தேடி பிடித்துள்ளார். வேதிகா என்ற பெண் லிங்க்டு-இன் வலைதளத்தில் தன்னுடைய பழைய தோழிகளை தேடி உள்ளார்.

    அப்போது 15 வருடத்திற்கு முன்பு தன்னுடன் நெருங்கிய தோழியாக இருந்த பர்னாளி என்ற தோழியை வலைதளம் வாயிலாக கண்டறிந்து அவருடன் ஒன்று சேர்ந்ததை டுவிட்டர் வலைதளத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்து உள்ளார். மேலும் லிங்க்டு-இன் வலைதளத்தில் தனது தோழியுடன் பேசிய ஸ்கிரீன் ஷாட்டை இணைத்து, என்னுடைய சிறுவயது தோழியுடன் 15 ஆண்டுகள் கழித்து ஒன்று சேர்ந்துள்ளோம் என்ற வாசகங்களையும் அவர் இணைத்துள்ளார். வேதிகாவின் இந்த பதிவு 4 லட்சத்துக்கும் அதிகமான பார்வைகளை குவித்து வருகிறது.

    Next Story
    ×