search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    தினசரி பாதிப்பு தொடர்ந்து அதிகரிப்பு- இந்தியாவில் ஒரே நாளில் 754 பேருக்கு கொரோனா
    X

    தினசரி பாதிப்பு தொடர்ந்து அதிகரிப்பு- இந்தியாவில் ஒரே நாளில் 754 பேருக்கு கொரோனா

    • கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 327 பேர் உள்பட இதுவரை 4 கோடியே 41 லட்சத்து 57 ஆயிரத்து 297 பேர் குணமடைந்துள்ளனர்.
    • தற்போதைய நிலவரப்படி 4,623 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது நேற்றை விட 426 அதிகமாகும்.

    புதுடெல்லி:

    இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக மீண்டும் உயர்ந்து வருகிறது.

    சுமார் 3 மாதங்களுக்கு பிறகு கடந்த 12-ந்தேதி தினசரி பாதிப்பு 500-ஐ தாண்டியிருந்தது. அதன்பிறகு 2 நாட்கள் சற்று குறைந்த நிலையில், நேற்று ஒரே நாளில் 618 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது.

    இந்நிலையில் இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 754 பேருக்கு தொற்று உறுதியாகி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் 13-ந் தேதி நிலவரப்படி பாதிப்பு 734 ஆக இருந்தது. அதன்பிறகு 122 நாட்களில் இல்லாத அளவாக பாதிப்பு இன்று மீண்டும் 700-ஐ கடந்துள்ளது.

    இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 176 பேர், கர்நாடகாவில் 119 பேர், கேரளாவில் 100 பேர், குஜராத்தில் 90 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 46 லட்சத்து 92 ஆயிரத்து 710 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 327 பேர் உள்பட இதுவரை 4 கோடியே 41 லட்சத்து 57 ஆயிரத்து 297 பேர் குணமடைந்துள்ளனர்.

    தற்போதைய நிலவரப்படி 4,623 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது நேற்றை விட 426 அதிகமாகும்.

    கொரோனா பாதிப்பால் நேற்று கர்நாடகாவில் ஒருவர் இறந்துள்ளார். மொத்த பலி எண்ணிக்கை 5,30,790 ஆக உயர்ந்துள்ளது.

    Next Story
    ×