என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
இந்தியாவில் கொரோனா நிலவரம்- 3 நாட்களுக்கு பிறகு மீண்டும் 20 ஆயிரத்தை தாண்டியது புதிய பாதிப்பு
- கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 19,216 பேர் நலம்பெற்றனர்.
- இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 32 லட்சத்து 86 ஆயிரத்து 787 ஆக உயர்ந்தது.
புதுடெல்லி:
கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 20,557 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
கடந்த 24-ந் தேதி பாதிப்பு 20,279 ஆக இருந்தது. 25-ந் தேதி 16,866, 26-ந் தேதி 14,830, நேற்று 18,313 ஆக இருந்த நிலையில் இன்று மீண்டும் 20 ஆயிரத்தை தாண்டி உள்ளது.
நாட்டில் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 39 லட்சத்து 59 ஆயிரத்து 321 ஆக உயர்ந்தது.
தொற்று பாதிப்பால் மேலும் 44 பேர் இறந்துள்ளனர். இதுவரை பலியானோர் எண்ணிக்கை 5,26,211 ஆக உயர்ந்தது.
கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 19,216 பேர் நலம்பெற்றனர். இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 32 லட்சத்து 86 ஆயிரத்து 787 ஆக உயர்ந்தது.
தற்போது 1,46,323 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது நேற்றை விட 1,297 குறைவு ஆகும்.
நாடு முழுவதும் இதுவரை 203 கோடியே 21 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டுள்ளது. இதில் நேற்று 40,69,241 டோஸ்கள் அடங்கும்.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்படி நேற்று 3,96,783 மாதிரிகளும், இதுவரை 87.40 கோடி மாதிரிகளும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்