என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
சுவர் இடிந்து விழுந்து 2 தொழிலாளர்கள் பலி
- 2 பேர் பலியான சம்பவம் காசர்கோடு பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
- போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவனந்தபுரம்:
கர்நாடக மாநிலம் கொப்பலா பகுதியை சேர்ந்தவர் லஷ்மப்பா (வயது43), ஷிவோக்கா மாவட்டத்தை சேர்ந்தவர் பசய்யா(40). இவர்கள் கேரளா மாநிலம் காசர் கோட்டில் தங்கி கூலி வேலை பார்த்து வந்தனர்.
நேற்று காசர்கோட்டில் மார்க்கெட் ரோடு பகுதியில் குடிநீர் குழாய் பதிப்பதற்கு குழி தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் ஒரு கட்டிடம் மற்றும் அதன் அருகே இருந்த பெரிய காம்பவுண்ட் சுவருக்கு இடைப்பட்ட பகுதியில் குழி தோண்டினர்.
அப்போது அந்த காம்பவுண்டு சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இதில் லஷ்மப்பா மற்றும் பசய்யா ஆகிய இருவரும் இடிந்து விழுந்த காம்பவுண்ட் சுவருக்கு அடியில் சிக்கிக் கொண்டனர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
உடனே அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். சந்தையில் இருந்த தலைச்சுமை தொழிலாளர்களின் உதவியுடன், இடிபாடுகளை போலீசார் அகற்றுனர். அப்போது லஷ்மப்பா மற்றும் பசய்யா ஆகிய இருவரும் படுகாயமடைந்து கிடந்தனர்.
அவர்கள் அங்கிருந்து மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களை பரிசோதித்த டாக்டர்கள், இருவரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து இருவரின் உடலையும் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சுவர் இடிந்துவிழுந்து தொழிலாளர்கள் 2 பேர் பலியான சம்பவம் காசர்கோடு பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்