search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஜனாதிபதி தேர்தல்- பிரதமர் மோடி வாக்களித்தார்
    X

    பிரதமர் மோடி


    ஜனாதிபதி தேர்தல்- பிரதமர் மோடி வாக்களித்தார்

    • முதல் நபராக அவர் அங்கு தனது வாக்கை பதிவு செய்தார்.
    • எம்.பி.க்கள் ஒவ்வொருவராக வந்து வாக்களித்து வருகிறார்கள்.

    புதுடெல்லி:

    புதிய ஜனாதிபதியை தேர்வு செய்ய இன்று நாடு முழுவதும் காலை 10 மணி முதல் ஓட்டுப்பதிவு நடந்து வருகிறது. எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்து வருகிறார்கள்.

    டெல்லியில் எம்.பி.க்கள் வாக்களிப்பதற்காக பாராளுமன்ற வளாகத்தில் அறை எண்.63-ல் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. பிரதமர் மோடி அங்கு 10.05 மணிக்கு வந்தார். முதல் நபராக அவர் அங்கு தனது வாக்கை பதிவு செய்தார்.

    அதன்பிறகு எம்.பி.க்கள் ஒவ்வொருவராக வந்து வாக்களித்து வருகிறார்கள். இன்று மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.

    Next Story
    ×