என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
சென்னை வருவதற்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்- பிரதமர் மோடி டுவிட்
- பிரதமர் நரேந்திர மோடி செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைக்கிறார்.
- செஸ்சுடன் பெருமைமிக்க தொடர்பை கொண்டுள்ள தமிழ்நாட்டில் இந்த போட்டி நடைபெறுவது நமக்கு பெருமையாகும்.
புதுடெல்லி:
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நாளை முதல் ஆகஸ்ட் 10-ந் தேதி வரை நடக்கிறது. இதற்கான பிரமாண்ட தொடக்க விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் இன்று மாலை 6 மணிக்கு நடக்கிறது.
பிரதமர் நரேந்திர மோடி செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைக்கிறார். இதற்காக குஜராத்தில் இருந்து தனி விமானம் மூலம் மாலை 4.45 மணிக்கு சென்னை வருகிறார்.
இந்த நிலையில் செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவுக்காக சென்னை வருவதற்கு ஆவலுடன் காத்திருக்கிறேன் என்று பிரதமர் மோடி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-
இன்று மாலை 6 மணிக்கு நடைபெறும் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவுக்காக சென்னை வருவதற்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்.
இந்தியாவிலேயே அதுவும் செஸ்சுடன் பெருமைமிக்க தொடர்பை கொண்டுள்ள தமிழ்நாட்டில் இந்த போட்டி நடைபெறுவது நமக்கு பெருமையாகும்.
இவ்வாறு மோடி அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்