search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சென்னை வருவதற்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்- பிரதமர் மோடி டுவிட்
    X

    பிரதமர் மோடி

    சென்னை வருவதற்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்- பிரதமர் மோடி டுவிட்

    • பிரதமர் நரேந்திர மோடி செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைக்கிறார்.
    • செஸ்சுடன் பெருமைமிக்க தொடர்பை கொண்டுள்ள தமிழ்நாட்டில் இந்த போட்டி நடைபெறுவது நமக்கு பெருமையாகும்.

    புதுடெல்லி:

    44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நாளை முதல் ஆகஸ்ட் 10-ந் தேதி வரை நடக்கிறது. இதற்கான பிரமாண்ட தொடக்க விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் இன்று மாலை 6 மணிக்கு நடக்கிறது.

    பிரதமர் நரேந்திர மோடி செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைக்கிறார். இதற்காக குஜராத்தில் இருந்து தனி விமானம் மூலம் மாலை 4.45 மணிக்கு சென்னை வருகிறார்.

    இந்த நிலையில் செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவுக்காக சென்னை வருவதற்கு ஆவலுடன் காத்திருக்கிறேன் என்று பிரதமர் மோடி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

    இன்று மாலை 6 மணிக்கு நடைபெறும் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவுக்காக சென்னை வருவதற்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்.

    இந்தியாவிலேயே அதுவும் செஸ்சுடன் பெருமைமிக்க தொடர்பை கொண்டுள்ள தமிழ்நாட்டில் இந்த போட்டி நடைபெறுவது நமக்கு பெருமையாகும்.

    இவ்வாறு மோடி அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×