search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    4-வதாக பிறந்த பெண் குழந்தையை 20 அடி பள்ளத்தில் வீசிய தாய்
    X

    4-வதாக பிறந்த பெண் குழந்தையை 20 அடி பள்ளத்தில் வீசிய தாய்

    • கட்டிட மேஸ்திரியின் மனைவிக்கு ஆண் குழந்தை வேண்டும் என்ற ஆசை இருந்தது.
    • குடும்ப கட்டுப்பாடு செய்யாமலேயே குடும்ப கட்டுப்பாடு செய்து கொண்டதாக கணவரிடம் பொய் கூறினார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டம், வேமகிரி கணபதி நகரை சேர்ந்தவர் கட்டிட மேஸ்திரி. இவருக்கு 3 மகள்கள் உள்ளனர். அவர்கள் அங்குள்ள பள்ளிகள் படித்து வருகின்றனர்.

    கட்டிட மேஸ்திரியின் மனைவிக்கு ஆண் குழந்தை வேண்டும் என்ற ஆசை இருந்தது. இதனால் குடும்ப கட்டுப்பாடு செய்யாமலேயே குடும்ப கட்டுப்பாடு செய்து கொண்டதாக கணவரிடம் பொய் கூறினார்.

    இந்த நிலையில் அவர் கர்ப்பமானார். நேற்று முன்தினம் பிரசவ வலி ஏற்பட்டது. இதில் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.

    பெண் குழந்தை பிறந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த தாய் குழந்தையை தனது நைட்டியில் சுற்றி எடுத்துச் சென்று 20 அடி பள்ளத்தில் வீசிவிட்டு வீட்டுக்கு வந்தார்.

    குழந்தை அழும் சத்தம் கேட்ட அப்பகுதி மக்கள் குழந்தையை மீட்டு எடுத்து வந்தனர். அப்போது சம்பவ இடத்திற்கு வந்த கட்டிட மேஸ்திரி குழந்தைக்கு சுற்றப்பட்டுள்ள நைட்டி தனது மனைவி உடையது என்று கண்டுபிடித்தார். பின்னர் வீட்டிற்கு வந்து மனைவியிடம் கேட்டபோது ஆண் குழந்தை வேண்டும் என்ற ஆசையில் கர்ப்பத்தை மறைத்ததாக கூறினார்.

    இதையடுத்து மனைவி மற்றும் மகளை அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தாயும் குழந்தையும் நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    Next Story
    ×