search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ரத்த தானம்,மனித குலத்திற்கு ஆற்றும் ஒரு உன்னத சேவை- மன்சுக் மாண்டவியா
    X

    மன்சுக் மாண்டவியா

    ரத்த தானம்,மனித குலத்திற்கு ஆற்றும் ஒரு உன்னத சேவை- மன்சுக் மாண்டவியா

    • ரத்த தானம் செய்ய முன்வருமாறு அனைத்து மக்களையும் கேட்டுக் கொள்கிறேன்.
    • ஒவ்வொரு இரண்டு வினாடிகளிலும், இந்தியாவில் ஒருவருக்கு ரத்தம் தேவைப்படுகிறது.

    விடுதலை அமிர்த பெருவிழாவின் ஒரு பகுதியாக டெல்லியில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனையில் ரத்த தான முகாமை, மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா தொடங்கி வைத்தார். அப்போது அவர் ரத்த தானம் வழங்கினார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

    விடுதலையின் அமிர்தப்பெருவிழாவைப் போல ரத்த தான அமிர்தப் பெருவிழாவும் பெரிய கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாகும். இதையொட்டி நாடு தழுவிய அளவில் நடைபெறும் மெகா தன்னார்வ ரத்த தான இயக்கத்தில் கலந்து கொண்டு, ரத்த தானம் செய்ய முன் வருமாறு அனைத்து குடிமக்களையும் கேட்டுக் கொள்கிறேன்.


    ரத்த தானம் செய்வது தேசிய தேவையை பூர்த்தி செய்யும். ரத்த தானம் செய்வது சமூகத்திற்கும் மனித குலத்திற்கும் ஒரு சிறந்த உன்னதமான சேவையாகும். ஒவ்வொரு இரண்டு வினாடிகளிலும், இந்தியாவில் ஒருவருக்கு ரத்தம் தேவைப்படுகிறது. வாழ்நாளில் மூவரில் ஒருவருக்கு ரத்தம் தேவைப்படுகிறது.

    2021 புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவின் ஆண்டுத் தேவை சுமார் 1.5 கோடி யூனிட்கள். தொழில்நுட்ப முன்னேற்றங்கள் இருந்தபோதிலும், ரத்தத்திற்கு மாற்று எதுவும் இல்லை, மேலும் 1 யூனிட் ரத்தம் மூன்று உயிர்களைக் காப்பாற்றும். ஒரு நபரின் உடலில் 5 முதல் 6 லிட்டர் ரத்தம் உள்ளது. ஒவ்வொரு 90 நாட்களுக்கு ஒரு முறை ரத்த தானம் செய்யலாம். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

    Next Story
    ×