search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    நிகர நேரடி வரி வசூல் ரூ.8.65 லட்சம் கோடி - நிதி அமைச்சகம் தகவல்
    X

    நிகர நேரடி வரி வசூல் ரூ.8.65 லட்சம் கோடி - நிதி அமைச்சகம் தகவல்

    • நிகர நேரடி வரி வசூல் ரூ.8.65 லட்சம் கோடியாக உள்ளது.
    • இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது 23.51 சதவீத அதிகம் ஆகும்.

    புதுடெல்லி:

    மத்திய அரசு நேரடி மற்றும் மறைமுக வரி என்னும் 2 விதமான வரிகளை வசூலித்து வருகிறது. இதில் நேரடி வரிகள் என்பதில் தனிநபர் மற்றும் கம்பெனிகள் வருமான வரி, சொத்து வரி, பங்கு பரிமாற்ற வரி உள்ளிட்டவை அடங்கும். நேரடி வசூல் தொடர்பான விவரங்களை மத்திய நேரடி வரிகள் வாரியம் அவ்வப்போது வெளியிட்டு வருகிறது.

    இந்நிலையில், மத்திய நிதியமைச்சகம் அமைச்சகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

    கடந்த 16-ம் தேதி வரையிலான நேரடி வரி வசூல் ரூ.8.65 லட்சம் கோடியாக உள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது 23.51 சதவீத அதிகம் ஆகும்.

    நேரடி வரி வசூலுக்கான முழு ஆண்டு பட்ஜெட் மதிப்பீடு ரூ.18.23 லட்சம் கோடி ஆகும். அதில் 47.45 சதவீதம் தற்போது எட்டப்பட்டுள்ளது.

    நேரடி வரி வசூல் உயர்வுக்கு, நிறுவனங்கள் செலுத்திய முன்கூட்டிய வரி அதிகரித்திருப்பதுதான் காரணம் ஆகும்.

    தற்போதைய நேரடி வரி வசூலில் நிறுவனங்களுக்கான வருமான வரி ரூ.4.16 லட்சம் கோடி, பத்திர பரிவர்த்தனை வரி உள்ளிட்ட தனிநபர் வருமான வரி ரூ.4.47 லட்சம் கோடி அடங்கும்.

    வரி செலுத்துவோருக்கு, கடந்த 16-ம் தேதி வரை ரூ.1.22 லட்சம் திருப்பி வழங்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×