என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
ஜனவரி மாதம் 1.72 லட்சம் கோடி ரூபாய் ஜிஎஸ்டி வரி வசூல்
- கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 922 கோடி ரூபாய் வசூலாகியிருந்தது.
- 2023 ஏப்ரல்- 2024 ஜனவரி வரை 16.69 லட்சம் கோடி ரூபாய் வசூலியாகியுள்ளது.
2024-ம் ஆண்டின் முதல் மாதமான ஜனவரி மாதத்தில் மொத்த ஜிஎஸ்டி வரி வசூல் ஒரு லட்சத்து 72 ஆயிரத்து 219 கோடி ரூபாய் என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது கடந்த ஆண்டு (2023) ஜனவரி மாதத்தைவிட 10.4 சதவீதம் அதிகமாகும். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 922 கோடி ரூபாய் வசூலாகியிருந்தது.
ஜனவரி மாத வரி வசூல் இதுவரை வசூலான மாத வரி வசூலில் 2-வது மிகப்பெரிய தொகையாகும். மேலும், இந்த நிதியாண்டில் (2023-2024) 3-வது முறையாக 1.70 லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது.
2022 ஏப்ரல்- 2023 ஜனவரி வரையில் 14.96 லட்சம் கோடி ரூபாய் வசூல் ஆகியிருந்தது. தற்போது 2023 ஏப்ரல்- 2024 ஜனவரி வரை 16.69 லட்சம் கோடி ரூபாய் வசூலியாகியுள்ளது. இது கடந்த நிதியாண்டில் இதே காலத்தில் 11.6 சதவீதம் அதிகமாகும்.
ஐஜிஎஸ்டி வரி வசூல் மூலம் மத்திய அரசுக்கு 43 ஆயிரத்து 552 ரூபாய் கோடியும், மாநிலங்களுக்கு 37 ஆயிரத்து 257 கோடி ரூபாயும் கிடைத்துள்ளது எனவும் தெரிவித்துள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்