என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
தினசரி பாதிப்பு மீண்டும் உயர்வு- இந்தியாவில் புதிதாக 12,249 பேருக்கு கொரோனா
- டெல்லியில் புதிய பாதிப்பு 1,060-ல் இருந்து 1,383 ஆக உயர்ந்துள்ளது.
- நாடு முழுவதும் இதுவரை 196 கோடியே 45 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு நேற்று 10 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்திருந்த நிலையில் இன்று சற்று அதிகரித்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 12,249 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி உள்ளது.
அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 3,659 பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு நேற்று பாதிப்பு 2,354 ஆக இருந்த நிலையில், ஒரே நாளில் 57 சதவீதம் உயர்ந்துள்ளது. கேரளாவில் 2,609 பேர் பாதிப்பு உள்ளாகி இருக்கிறார்கள். டெல்லியில் புதிய பாதிப்பு 1,060-ல் இருந்து 1,383 ஆக உயர்ந்துள்ளது.
கர்நாடகாவில் 738, தமிழ்நாட்டில் 737, அரியானாவில் 611, உத்தரபிரதேசத்தில் 487, மேற்கு வங்கத்தில் 406, தெலுங்கானாவில் 403, குஜராத்தில் 226, கோவாவில் 135, பஞ்சாபில் 105 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாட்டில் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 33 லட்சத்து 31 ஆயிரத்து 645 ஆக உயர்ந்துள்ளது.
தொற்று பாதிப்பில் இருந்து மேலும் 9,862 பேர் நலம் பெற்றுள்ளனர். இதுவரை மொத்தம் 4 கோடியே 27 லட்சத்து 25 ஆயிரத்து 55 பேர் குணம் அடைந்துள்ளனர்.
தற்போது 81,687 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது நேற்றை விட 2,374 அதிகம் ஆகும்.
கேரளாவில் திருத்தப்பட்ட பட்டியலில் 8 மரணங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. இதுதவிர நேற்று மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், மேற்கு வங்கம், ஜம்மு காஷ்மீர், டெல்லியில் தலா ஒருவர் என மேலும் 13 பேர் இறந்துள்ளனர்.
இதுவரை தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 5,24,903 ஆக உயர்ந்துள்ளது.
நாடு முழுவதும் இதுவரை 196 கோடியே 45 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. இதில் நேற்று 12,28,291 டோஸ்கள் அடங்கும்.
இதற்கிடையே நேற்று 3,10,623 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. மொத்த பரிசோதனை எண்ணிக்கை 85.88 கோடியாக உயர்ந்துள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்