search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கொரோனா புதிய பாதிப்பு 13,734 ஆக குறைந்தது
    X

    கொரோனா புதிய பாதிப்பு 13,734 ஆக குறைந்தது

    • கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 33 லட்சத்து 83 ஆயிரத்து 787 ஆக உயர்ந்தது.
    • கொரோனாவிற்கு 1,39,792 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    புதுடெல்லி:

    நாடு முழுவதும் கொரோனா தினசரி பாதிப்பு தொடர்ந்து 5 நாட்களாக குறைந்து வருகிறது. அந்தவகையில் இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 13,734 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறி உள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 4 கோடியே 40 லட்சத்து 50 ஆயிரத்து 9 ஆக உயர்ந்தது.

    கொரோனா மீட்பு சிகிச்சையில் இருந்து நேற்று 17,897 பேர் டிஸ்சார்ஜ் ஆகினர். இதுவரை குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 33 லட்சத்து 83 ஆயிரத்து 787 ஆக உயர்ந்தது. தற்போது 1,39,792 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது நேற்றை விட 4,197 குறைவு ஆகும். தொற்று பாதிப்பு காரணமாக மேலும் 34 பேர் இறந்ததால், மொத்த பலி எண்ணிக்கை 5,26,430 ஆக உயர்ந்துள்ளது.

    Next Story
    ×