என் மலர்tooltip icon

    இந்தியா

    • பத்து வருடங்களாக பிஆர்எஸ் எதுவுமே செய்யவில்லை
    • ராகுல் காந்தியும், காங்கிரஸ் அமைப்பும் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற நிறுவனங்களை மீண்டும் மீண்டும் அவமதிப்பதில் ஆச்சரியமில்லை

    தெலங்கானா சட்டமன்றத்தில், 'தனது அரசின் மீதும், விவசாயிகள் மீதான அதன் அர்ப்பணிப்பின் மீதும் கேள்வி எழுப்புபவர்களின் "நாக்கை வெட்டிவிடுவேன்"' என்று முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    கிருஷ்ணா நதி நீர் பங்கீடு மற்றும் பாசனத் திட்டங்கள் தொடர்பான விவாதத்தின்போது பேசிய ரேவந்த் ரெட்டி, 

    "தெலுங்கானா மாநிலம் மற்றும் அதன் விவசாயிகள் மீது எங்களுக்கு இருக்கும் அக்கறைப் பற்றி யாராவது கேள்வி எழுப்பினால், அவர்களை நாங்கள் தோலுரிப்போம் என்று அவர் (கே.சி.ஆர்) கூறினார். ஆனால் நாங்கள் அவர்களைத் தோலுரிப்பது மட்டுமல்ல, அவர்களது நாக்கையும் சேர்த்து வெட்டுவோம். நீங்கள் எதை வேண்டுமானாலும் பேசலாம், எதை வேண்டுமானாலும் விமர்சிக்கலாம்; ஆனால் எங்கள் அர்ப்பணிப்புக்கு எதிராக கருத்து தெரிவித்தால், எங்களின் விசுவாசமானது உங்கள் நாக்கை வெட்டிவிடும்" என தெரிவித்தார். 

    தொடர்ந்து, சபாநாயகர் அவர்களே, இந்தப்பேச்சை நீங்கள் அவைக்குறிப்பிலிருந்து நீக்கலாம். ஆனால் பொதுமக்களின் மனதில் இதைப் பதியவைப்பதற்காக நான் இந்த அறிக்கையை அதிகாரப்பூர்வமாக வெளியிடுகிறேன். பத்து வருடங்களாக நீங்கள் எதுவுமே செய்யவில்லை, ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக தண்ணீர் கொண்டு வருவதற்கான அனுமதியைப் பெற நாங்கள் முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். எங்களை ஏன் அவமானப்படுத்த முயல்கிறீர்கள்? எனவும் பேசியுள்ளார். மேலும் முன்னாள் முதலமைச்சர் கே.சி.ஆர் உடன் தொடர்புடைய இருவர் குறித்து ரேவந்த் ரெட்டி அவையில் பேசியதாகவும் கூறப்படுகிறது. 

    ரேவந்த் ரெட்டியின் இந்த வன்முறைத் தூண்டல் பேச்சை "மலிவானது" என்று பி.ஆர்.எஸ் கட்சி கண்டித்துள்ளது. மேலும், அவர் பயன்படுத்திய வார்த்தைகள் நாடாளுமன்ற மரபுகளுக்கு எதிரானது என்று கூறி பி.ஆர்.எஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். மேலும் ரேவந்த் ரெட்டியின் இந்தப் பேச்சுக்கு பாஜக கடும் கண்டனங்களை பதிவு செய்தது. இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட தேசிய பாஜக தலைமை, 

    "காங்கிரஸ் தெலங்கானா சட்டமன்றத்தை ஒரு தெரு முனையாக மாற்றிவிட்டது. தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, அனைத்து ஜனநாயக வரம்புகளையும் மீறி, சபையிலேயே மூத்த தலைவர்களான கே.டி. ராமாராவ் மற்றும் ஹரீஷ் ராவ் ஆகியோருக்கு எதிராகத் தரக்குறைவான வார்த்தைகளைப் பேசியுள்ளார். இது ஒரு தற்செயலான தவறு அல்ல. இது விரக்தி, ஆணவம் மற்றும் சகிப்புத்தன்மையின்மை ஆகியவற்றின் முழுமையான வெளிப்பாடு. 

    இதுதான் இந்திய தேசிய காங்கிரஸின் உண்மையான முகம். அங்கு கண்ணியம், ஒழுக்கம் மற்றும் ஜனநாயக விழுமியங்களுக்கு அறவே இடம் என்பது இல்லை. ராகுல் காந்தியும், காங்கிரஸ் அமைப்பும் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற நிறுவனங்களை மீண்டும் மீண்டும் அவமதிப்பதில் ஆச்சரியமில்லை." எனக் குறிப்பிட்டுள்ளது. 

    பி.ஆர்.எஸ் தலைவர் தாசோஜு ஸ்ரவன் குமார் இந்த விவகாரத்தில் ராகுல் காந்தி தலையிடவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். 

    • பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் திருப்பதி தேவஸ்தான விஜிலன்ஸ் அதிகாரிகள் மற்றும் போலீசார் திணறினர்.
    • அலிபிரி சோதனை சாவடியில் பக்தர்களின் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டதால் பல மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட துவார தரிசனம் வழங்கப்பட்டு வருகிறது. தொடர் விடுமுறை காரணமாக வைகுண்ட துவார தரிசனத்தில் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக லட்சக்கணக்கான மக்கள்கள் குவிந்தனர்.

    பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் திருப்பதி தேவஸ்தான விஜிலன்ஸ் அதிகாரிகள் மற்றும் போலீசார் திணறினர். ஏ.ஐ தொழில் நுட்பத்தை பயன்படுத்தி எவ்வளவு பக்தர்கள் தரிசனத்துக்கு வந்துள்ளனர் என கணித்து குறைந்த நேரத்தில் தரிசனத்திற்கு அனுமதித்தனர்

    அலிபிரி சோதனை சாவடியில் பக்தர்களின் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டதால் பல மணி நேரம் போக்குவரத்து பாதித்தது. இன்று காலையிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    திருப்பதியில் நேற்று 88,662 பேர் தரிசனம் செய்தனர். 24, 417 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ. 5.05 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 12 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    • இமாம் மற்றும் உமர் காலித்தின் ஜாமீன் மனுக்கள் 2022 முதல் நிலுவையில் உள்ளது
    • உச்சநீதிமன்றம் உமர் காலித்துக்கு ஜாமீன் வழங்க பலமுறை மறுப்பு தெரிவித்தது

    2020 பிப்ரவரியில் வடகிழக்கு டெல்லியில் நடந்த குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) எதிர்ப்பு போராட்டங்கள் வன்முறையாக மாறிய சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கலவரத்தில் குறைந்தது 53 பேர் கொல்லப்பட்டனர். மொத்தம் 700க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

    இந்த கலவர வழக்கில் JNU பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் ஷர்ஜீல் இமாம் மற்றும் உமர் காலித் உட்பட 15 பேர் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் (UAPA) கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த வழக்கில் இமாம் மற்றும் உமர் காலித்தின் ஜாமின் மனுக்கள் 2022 முதல் நிலுவையில் உள்ளது. உச்சநீதிமன்ற அமர்வு அவர்களுக்கு ஜாமின் வழங்க பலமுறை மறுப்பு தெரிவித்தது.

    சமீபத்தில் தனது சகோதரியின் திருமணத்திற்காக அவருக்கு 14 நாட்கள் இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டது. ஜாமின் காலம் முடிந்து கடந்த டிசம்பர் 29 காலித் சிறை திரும்பினார்.

    இதனிடையே நியூயார்க் நகரின் புதிய மேயராகப் பதவியேற்றுள்ள ஜோஹ்ரான் மம்தானி ஏற்கனவே உமர் காலித்திற்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். மேலும், உமர் காலித்துக்கு ஜாமின் வழங்கக் கோரியும், சர்வதேச சட்டங்களின்படி அவருக்கு நியாயமான விசாரணை நடத்த வலியுறுத்தியும் அமெரிக்காவின் 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தியத் தூதருக்குக் கடிதம் எழுதினர். அமெரிக்க எம்.பி.க்களின் இந்தத் தலையீட்டிற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

    இந்நிலையில், உமர் காலித் மற்றும் ஷர்ஜீல் இமாம் ஆகியோரின் ஜாமின் மனுவை உச்ச நீதிமன்றம் இன்று நிராகரித்தது. அதே சமயம், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட குல்ஃபிஷா ஃபாத்திமா, மீரா ஹைதர், ஷிஃபா உர் ரஹ்மான், முகமது சலீம் கான் மற்றும் ஷதாப் அகமது ஆகிய 5 பேருக்கு உச்ச நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.

    உமர் காலித், ஷர்ஜில் இமாம் ஆகியோருக்கு ஜாமீன் வழங்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்ததை விட மிக முக்கியமான விஷயம் ஒன்று உள்ளது.

    சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒருவருக்கு வழங்கப்படும் விசாரணைக்கு முந்தைய சிறை காலத்தை தண்டனையாக கருத முடியாது என சொல்லி இருப்பதுதான்

    நீதித்துறையின் பாரபட்சம்:

    'தேரா சச்சா சவுதா' அமைப்பின் தலைவர் சாமியார் குர்மீத் ராம், தனது ஆசிரமத்தில் 2 பெண் சீடர்களை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு மற்றும் பத்திரிகையாளர் கொலை வழக்கு ஆகியவற்றில் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார். ஆனால் 2017-ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை மொத்தம் 15 முறை பரோலில் வெளியே வந்துள்ளார்.

    இதேபோல் உன்னா பாலியல் வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பா.ஜ.க. முன்னாள் எம்.எல்.ஏ குல்தீப்சிங் செங்காரின் ஆயுள் தண்டனையை நிறுத்தி வைத்ததோடு, டெல்லி ஐகோர்ட் ஜாமினும் வழங்கி உத்தரவிட்டது பெரும் பரபரப்பை ஏற்பட்டது.இதனையடுத்து செங்காரின் சிறை தண்டனையை நிறுத்தி வைத்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

    பெண்கள் மீது கொடூர செயல்களை செய்ய நபர்களுக்கு கூட பலமுறை ஜாமின் தரும் இந்த நீதித்துறை உபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு எந்த குற்றமும் நிரூபிக்கப்படாத விசாரணை கைதிகளுக்கு ஜாமின் தராமல் இழுத்தடிப்பதும் அந்த இடைப்பட்ட காலத்தில் அவர்கள் அனுபவிக்கும் சிறை காலத்தை தண்டனையாக கருத முடியாது என சொல்லி இருப்பதுதான் அநியாத்தின் உச்சக்கட்டம் ஆகும்.

    நம் நாட்டில் அதிகாரத்தின் நிழலில் இருப்பவர்கள் எத்தகைய கொடூர குற்றம் புரிந்து தண்டனை கொடுக்கப்பட்டாலும் அவர்களுக்கு எளிதாக பரோல் கிடைக்கிறது.

    ஆனால் அதிகாரத்திற்கு எதிராக யாரவது இருந்தால் அவர்களை எத்தனை வருடங்கள் வேண்டுமானாலும் ஆட்சி அதிகாரத்தில் உள்ள அரசு தொடர்ந்து சிறையிலேயே வைத்திருக்கலாம் என்ற பேராபத்து ஏற்பட்டுள்ளது.

    • இமாம் மற்றும் உமர் காலித்தின் ஜாமீன் மனுக்கள் 2022 முதல் நிலுவையில் உள்ளது.
    • உச்சநீதிமன்ற அமர்வு அவர்களுக்கு ஜாமீன் வழங்க பலமுறை மறுப்பு தெரிவித்தது.

    2020 பிப்ரவரியில் வடகிழக்கு டெல்லியில் நடந்த குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) எதிர்ப்பு போராட்டங்கள் வன்முறையாக மாறிய சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கலவரத்தில் குறைந்தது 53 பேர் கொல்லப்பட்டனர். மொத்தம் 700க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

    இந்த கலவர வழக்கில் JNU பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் ஷர்ஜீல் இமாம் மற்றும் உமர் காலித் உட்பட 15 பேர் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் (UAPA) கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த வழக்கில் இமாம் மற்றும் உமர் காலித்தின் ஜாமின் மனுக்கள் 2022 முதல் நிலுவையில் உள்ளது. உச்சநீதிமன்ற அமர்வு அவர்களுக்கு ஜாமின் வழங்க பலமுறை மறுப்பு தெரிவித்தது.

    சமீபத்தில் தனது சகோதரியின் திருமணத்திற்காக அவருக்கு 14 நாட்கள் இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டது. ஜாமின் காலம் முடிந்து கடந்த டிசம்பர் 29 காலித் சிறை திரும்பினார்.

    இதனிடையே நியூயார்க் நகரின் புதிய மேயராகப் பதவியேற்றுள்ள ஜோஹ்ரான் மம்தானி ஏற்கனவே உமர் காலித்திற்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். மேலும், உமர் காலித்துக்கு ஜாமின் வழங்கக் கோரியும், சர்வதேச சட்டங்களின்படி அவருக்கு நியாயமான விசாரணை நடத்த வலியுறுத்தியும் அமெரிக்காவின் 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தியத் தூதருக்குக் கடிதம் எழுதினர். அமெரிக்க எம்.பி.க்களின் இந்தத் தலையீட்டிற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

    இந்நிலையில், உமர் காலித் மற்றும் ஷர்ஜீல் இமாம் ஆகியோரின் ஜாமின் மனுவை உச்ச நீதிமன்றம் இன்று நிராகரித்தது. அதே சமயம், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட குல்ஃபிஷா ஃபாத்திமா, மீரா ஹைதர், ஷிஃபா உர் ரஹ்மான், முகமது சலீம் கான் மற்றும் ஷதாப் அகமது ஆகிய 5 பேருக்கு உச்ச நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.

    • அசாமில் உள்ள மோரிகான் பகுதியில் அதிகாலை 4.17 மணியளவில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது.
    • மத்திய கிழக்கு பூடான், சீனாவின் சில பகுதிகள் மற்றும் வங்காள தேசத்திலும் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.

    திரிபுரா மற்றும் அசாம் உள்ளிட்ட வட மாநிலங்களில் இன்று அதிகாலையில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. திரிபுராவின் கோமதி பகுதியில் இன்று அதிகாலை 3.33 மணியளவில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது.

    இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.9 ஆக பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்து உள்ளது. 54 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

    அதன் தொடர்ச்சியாக, அசாமில் உள்ள மோரிகான் பகுதியில் இன்று அதிகாலை 4.17 மணியளவில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்து உள்ளது. 50 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

    இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் உடனடியாக வெளியாகவில்லை. இந்த நில நடுக்கத்தை தொடர்ந்து ஏற்பட்ட நில அதிர்வை அண்டை பகுதிகளான கம்ரூப் பெருநகரம், நாகோன், கிழக்கு கர்பி அங்லாங், மேற்கு கர்பி அங்லாங், சிவசாகர், கச்சார், கரீம்கஞ்ச், துப்ரி, கோல் பாரா மாவட்டம் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களும் உணர்ந்தனர்.

    மேலும் இந்த நிலநடுக்கம் அருணாசல பிரதேசத்தின் சில மத்திய-மேற்கு பகுதிகள், மேகாலயா, நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம் மற்றும் மேற்கு வங்காளத்தின் பல பகுதிகளில் உணரப்பட்டது. மேலும் மத்திய கிழக்கு பூடான், சீனாவின் சில பகுதிகள் மற்றும் வங்காள தேசத்திலும் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.

    அதிகாலை வேளையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் தூக்கத்தில் இருந்து எழுந்த பொதுமக்கள் அச்சத்துடன் தங்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்தனர். பின்னர் பாதுகாப்பான இடங்களில் வீதியில் தஞ்சம் அடைந்தனர்.

    • பழைய பாராளுமன்றத்தின் மைய மண்டபத்தில், இம்மாதம் 14-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை 4 நாட்கள் மாநாடு நடக்கிறது.
    • ‘வலிமையான ஜனநாயக அமைப்புகளை பராமரிப்பதில் சபாநாயகர்களின் பங்கு’ என்ற சிறப்பு கருத்தரங்கும் நடைபெறும்.

    புதுடெல்லி:

    கடந்த 1969-ம் ஆண்டு, காமன்வெல்த் நாடுகளின் பாராளுமன்ற சபாநாயகர்கள் மற்றும் சபைத்தலைவர்கள் அமைப்பு தொடங்கப்பட்டது. அந்த அமைப்பில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளது. இதன் மாநாடு, ஆண்டுதோறும் நடந்து வருகிறது.

    காமன்வெல்த் நாடுகளின் பாராளுமன்ற சபாநாயகர்களை ஒன்றிணைப்பதுதான் இதன் நோக்கம் ஆகும்.

    இந்நிலையில், நடப்பாண்டில், காமன்வெல்த் நாடுகளின் பாராளுமன்ற சபாநாயகர்கள் மற்றும் சபைத்தலைவர்கள் மாநாடு டெல்லியில் நடக்கிறது. இதை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா நடத்துகிறார்.

    பழைய பாராளுமன்றத்தின் மைய மண்டபத்தில், இம்மாதம் 14-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை 4 நாட்கள் மாநாடு நடக்கிறது.

    15-ந் தேதி, இந்த மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைப்பார் என்று தெரிகிறது.

    பாராளுமன்றங்களின் செயல்பாட்டில் செயற்கை நுண்ணறிவு, சமூக வலைத்தளங்கள் ஆகியவற்றை பயன்படுத்துவதுதான் மாநாட்டின் நோக்கமாக இருக்கும் என்று ஓம் பிர்லா கடந்த ஆண்டு தெரிவித்தார்.

    அதன்படி, மாநாட்டில், 'பாராளுமன்றத்தில் செயற்கை நுண்ணறிவு', சமூக வலைத்தளங்கள் மற்றும் பாராளுமன்றவாதிகளில் அவற்றின் தாக்கம்', 'பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பு, சுகாதாரம்' ஆகிய தலைப்புகளில் தனித்தனி அமர்வுகள் நடக்கின்றன.

    'வலிமையான ஜனநாயக அமைப்புகளை பராமரிப்பதில் சபாநாயகர்களின் பங்கு' என்ற சிறப்பு கருத்தரங்கும் நடைபெறும்.

    • வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்கள் நீக்கப்பட்டதற்கு முதல் மந்திரி மம்தா கண்டனம் தெரிவித்தார்.
    • தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு முதல் மந்திரி மம்தா பானர்ஜி கடிதம் ஒன்று அனுப்பினார்.

    கொல்கத்தா:

    மேற்கு வங்கத்தில் இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அங்கு வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. திருத்தப் பணிகள் முடிந்து வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், 58 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டன.

    இதற்கிடையே, வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்கள் நீக்கப்பட்டதற்கு மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி உள்ளிட்ட பலர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

    இந்நிலையில், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு முதல் மந்திரி மம்தா பானர்ஜி கடிதம் ஒன்று அனுப்பியுள்ளார்.

    அதில் அவர் கூறுகையில், மாநிலத்தில் நடந்து வரும் எஸ்.ஐ.ஆர். பணிகளை நிறுத்தவேண்டும். பெருமளவிலான மக்களின் வாக்குரிமையை இழக்கச் செய்கிறது. இது நாட்டின் ஜனநாயக அடித்தளத்திற்கு சரிசெய்ய முடியாத பெரும் சேதத்தை ஏற்படுத்தும். எஸ்.ஐ.ஆர். பணிகளில் சமரசம் செய்யப்பட்டுள்ளது. நாட்டின் அடிப்படை அரசியலமைப்பை தாக்குகிறது என தெரிவித்துள்ளார்.

    • பிரம்மாண்ட திட்டங்களுக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.
    • இந்தியா இப்போது முழு சுதந்திரத்துடன் அணைகளை வடிவமைக்கிறது.

    ஜம்மு-காஷ்மீரில் உள்ள நதிநீர் ஆதாரங்களை முழுமையாகப் பயன்படுத்தவும், பிராந்தியத்தின் மின் தேவையைப் பூர்த்தி செய்யவும் இந்திய அரசு தனது நீர்மின் திட்டங்களை அதிவேகமாக முடுக்கிவிட்டுள்ளது.

    குறிப்பாக, 1960-ஆம் ஆண்டு போடப்பட்ட சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா 2025-இல் முறைப்படி நிறுத்தி வைத்ததைத் தொடர்ந்து, இந்தப் பணிகள் இன்னும் வேகம் பெற்றுள்ளன.

    மத்திய அரசு மற்றும் தேசிய நீர்மின் கழகம் இணைந்து சுமார் 3,000 மெகாவாட்டிற்கு அதிகமான மின் உற்பத்தித் திறன் கொண்ட நான்கு பெரிய திட்டங்களை தீவிரப்படுத்தியுள்ளன.

    அதன்படி, பகல் துல் - 1000 மெகாவாட்(MW): செனாப் நதியின் கிளை நதியான மருசுதார் நதியில் அமைகிறது. இது செப்டம்பர் 2026-க்குள் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ராட்லே - 850 MW: செனாப் நதியின் குறுக்கே அமையும் இந்தத் திட்டம் மே 2026-இல் மின் உற்பத்தியைத் தொடங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கிரு - 624 MW: கிஷ்த்வார் மாவட்டத்தில் அமையும் இத்திட்டம் டிசம்பர் 2026-க்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

    குவார்- 540 MW: இது 2028-ம் ஆண்டின் தொடக்கத்தில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஏப்ரல் 2025-இல் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்தது. இதனால், நதிநீரைத் தேக்கி வைப்பதில் இருந்த கட்டுப்பாடுகள் நீங்கி, இந்தியா இப்போது முழு சுதந்திரத்துடன் அணைகளை வடிவமைக்கிறது.

    நீண்ட காலத்திற்குப் பிறகு சலால் மற்றும் பாக்லிஹார் அணைகளில் தேங்கியுள்ள வண்டல் மண்ணை அகற்றும் பணிகளை இந்தியா தொடங்கியுள்ளது. இது மின் உற்பத்தித் திறனை அதிகரிக்க உதவும்.

    அண்மையில் (டிசம்பர் 2025 இறுதியில்), செனாப் நதியில் துல்ஹஸ்தி நிலை-II (260 MW) மற்றும் சவல்கோட் (1,856 MW) ஆகிய பிரம்மாண்ட திட்டங்களுக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.

    இந்தியாவின் இந்த அதிரடி நடவடிக்கைகளால் தங்களுக்கு வரும் நதிநீர் குறையும் என்று பாகிஸ்தான் சர்வதேச அளவில் முறையிட்டு வருகிறது. இருப்பினும், தனது இறையாண்மை மற்றும் வளர்ச்சி நலன்களின் அடிப்படையில் இந்தியா பணிகளைத் தொடர்ந்து வருகிறது.

    • 56 இன்ச் மார்பு இருந்தால், துணிச்சலாகச் செயல்பட்டு, பயங்கரவாதிகளை இந்தியாவுக்குக் கொண்டு வர வேண்டும்
    • டிரம்பால் முடிந்தால் உங்களாலும் (மோடி) முடியும்

    டிரம்பால் மற்றொரு நாட்டின் அதிபரையே பிடித்து வர முடியும்போது, பிரதமர் மோடியால் ஏன் பாகிஸ்தானில் பதுங்கியிருக்கும் 26/11 மும்பை தாக்குதல் குற்றவாளிகளை கொண்டுவர முடியாது என ஒவைசி கேள்வி எழுப்பியுள்ளார். 

    மும்பையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய AIMIM தலைவர் அசாதுதீன் ஒவைசி, 

    "அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் படைகள் வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை சிறைபிடித்து, அவரது நாட்டிலிருந்து அமெரிக்காவிற்கு அழைத்துச் சென்றதாக கேள்விப்பட்டோம். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பால் வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை கைதுசெய்ய முடிந்தால், நீங்களும் (பிரதமர் மோடி) பாகிஸ்தானுக்கு சென்று 26/11 பயங்கரவாத தாக்குதலின் மூளையாக செயல்பட்டவரை இந்தியாவிற்கு கொண்டு வர முடியும்.

    மோடி அவர்களே, நாங்கள் உங்களிடம் கேட்கிறோம், மசூத் அசார் ஆகட்டும் அல்லது லஷ்கர்-இ-தைபாவைச் சேர்ந்த கொடூரமான ஒரு அரக்கனாக இருக்கட்டும், 26/11 பயங்கரவாதத் தாக்குதல்களின் மூளையாகச் செயல்பட்டவர்களை இந்தியாவுக்குக் கொண்டு வர ஏன் இந்திய ராணுவத்தை பாகிஸ்தானுக்கு அனுப்பக்கூடாது? டிரம்பால் முடிந்தால் உங்களாலும் முடியும். டிரம்புக்கு ஒன்றும் சளைத்தவர் அல்ல நீங்கள். அப்கி பார் டிரம்ப் சர்க்கார் " எனப் பேசியுள்ளார்.

     

    • முன்னதாக இந்த எண்ணிக்கை 90 ஆக இருந்தது.
    • தொகுதி வரையறைக்குப் பின் எண்ணிக்கை 13 முதல் 15 வரை அதிகரித்துள்ளது.

    தமிழ்நாடு, மேற்கு வங்க மாநிலத்துடன் பாஜக ஆளும் அசாம் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் 126 இடங்களில் பாஜக கூட்டணி 103 இடங்களை பிடிக்கும் என அம்மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூகையில் "இந்த நேரத்தில் பாஜக கூட்டணி 103 இடங்களில் வெற்றி பெற வாய்ப்புள்ளது. முன்னதாக இந்த எண்ணிக்கை 90 ஆக இருந்தது. தொகுதி வரையறைக்குப் பின் எண்ணிக்கை 13 முதல் 15 வரை அதிகரித்துள்ளது.

    நாங்கள் நூறு சதவீத இடங்களை வெல்கிறோமா, 90 அல்லது 80 சதவீத இடங்களுக்குள் சுருங்கிவிடுகிறோமா என்பதை மக்கள்தான் தீர்மானிப்பார்கள்.

    இவ்வாறு ஹிமாந்தா சர்மா தெரிவித்துள்ளார்.

    அசாம் மாநிலத்தில் தொகுதி வரையறை 2023-ல் முடிவடைந்தது. மக்களவை மற்றும் சட்டசபை இடங்களின் எல்லைகள் மாற்றி அமைக்கப்பட்டன. ஆனால், எண்ணிக்கையில் எந்த பாதிப்பும் இல்லை. 

    • மாரத்தான் போட்டியில் 3-ம் இடம் பிடித்த நிலையில் மயங்கி விழுந்தார்.
    • மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், ஏற்கனவே உயிரிழந்ததாக அறிவிப்பு.

    மகாராஷ்டிரா மாநிலம் பல்கார் மாவட்டத்தில் வெல்ஜி என்ற இடத்தில் உள்ள பாரதி அகாடமி ஆங்கில பள்ளியில் விளையாட்டு தினம் நடத்தப்பட்டது. இதில் ஏராளமான மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

    10-ம் வகுப்பு படித்த மாணவி ரோஷினி கோஸ்வாமி, மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டார். மாரத்தான் போட்டியில் சிறப்பாக செயல்பட்டு 3-வது இடம் பிடித்தார். 3-வது இடம் பிடித்த ரோஷினியை பாராட்ட கூடியிருந்த அனைவரும் தயாராக இருந்தனர். அப்போது எல்லையை அடைந்ததும், அப்படியே மைதானத்தில் அமர்ந்து, மயங்கிய நிலைக்கு சென்றார். அருகில் இருந்த ஆசிரியர்கள் அவருக்கு முதலுதவி அளித்து, அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

    மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்ற 15 வயது மாணவி மாரடைப்பால் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    மகள் உயிரிழந்தது குறித்து ரோஷினியின் தாயார் சுனிதா பென் கோஸ்வாமி கூறுகையில் "ரோஷினி இந்த நாள் நல்ல முறையில் தொடங்கினால். வழக்கமான நேரத்தில் எழுந்தார். சரியான உணவை உட்கொண்டார். டிபன் பாக்சில் மதிய உணவு எடுத்துக் கொண்டு பள்ளிக்கு சென்றார். மாரத்தான் போட்டியில் வெற்றி பெற என்னுடைய காலை தொட்டு ஆசீர்வாதம் வாங்கிச் சென்றாள். மதியம் அவர் இறந்து விட்டாள் என்ற இதயம் நொறுங்கும் செய்தியை பெற்றோம்" என கதறியபடி தெரிவித்தார்.

    • மும்பை மாநகராட்சித் தேர்தல் ஜன.15ஆம் தேதி நடைபெற உள்ளது.
    • ராஜ் தாக்கரே 2006-ல் சிவ சேனாவிலிருந்து விலகி MNS கட்சியைத் தொடங்கினார்

    மும்பை மாநகராட்சித் தேர்தல் ஜன.15ஆம் தேதி நடைபெற உள்ளநிலையில், உத்தவ் தாக்கரேவின் சிவ சேனா மற்றும் ராஜ் தாக்கரேவின் நவநிர்மாண் சேனா கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. இந்தத் தேர்தலுக்கான "வசன் நாமா" (தேர்தல் அறிக்கை) வெளியீட்டு விழா இன்று மும்பையில் உள்ள சிவசேனா தலைமையகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொள்வதற்காக ராஜ் தாக்கரே கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களுக்கு பிறகு சிவசேனா பவனுக்கு வருகைபுரிந்தார்.

    இதுகுறித்து பேசியுள்ள அவர், "இங்கு வருவது எப்படி இருக்கிறது என்று அனைவரும் என்னிடம் கேட்கிறார்கள். 20 ஆண்டுகளுக்குப் பிறகு நான் சிறையில் இருந்து வெளியே வந்தது போல் உணர்கிறேன்" என்று உணர்ச்சிப்பூர்வமாகத் தெரிவித்தார். ராஜ் தாக்கரே 2006-ல் சிவ சேனாவிலிருந்து விலகி MNS கட்சியைத் தொடங்கினார். அதன் பிறகு இன்றுதான் முதன்முறையாக சிவசேனா தலைமையகத்திற்கு வருகைதந்தார்.

    பல ஆண்டுகளாகப் பிரிந்திருந்த தாக்கரே சகோதரர்கள் மீண்டும் கூட்டணியில் இணைந்துள்ளது மகாராஷ்டிரா அரசியலில் ஒரு முக்கிய திருப்புமுனையாகக் கருதப்படுகிறது.

    ×