என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சபாநாயகர்கள் மாநாடு"

    • பழைய பாராளுமன்றத்தின் மைய மண்டபத்தில், இம்மாதம் 14-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை 4 நாட்கள் மாநாடு நடக்கிறது.
    • ‘வலிமையான ஜனநாயக அமைப்புகளை பராமரிப்பதில் சபாநாயகர்களின் பங்கு’ என்ற சிறப்பு கருத்தரங்கும் நடைபெறும்.

    புதுடெல்லி:

    கடந்த 1969-ம் ஆண்டு, காமன்வெல்த் நாடுகளின் பாராளுமன்ற சபாநாயகர்கள் மற்றும் சபைத்தலைவர்கள் அமைப்பு தொடங்கப்பட்டது. அந்த அமைப்பில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளது. இதன் மாநாடு, ஆண்டுதோறும் நடந்து வருகிறது.

    காமன்வெல்த் நாடுகளின் பாராளுமன்ற சபாநாயகர்களை ஒன்றிணைப்பதுதான் இதன் நோக்கம் ஆகும்.

    இந்நிலையில், நடப்பாண்டில், காமன்வெல்த் நாடுகளின் பாராளுமன்ற சபாநாயகர்கள் மற்றும் சபைத்தலைவர்கள் மாநாடு டெல்லியில் நடக்கிறது. இதை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா நடத்துகிறார்.

    பழைய பாராளுமன்றத்தின் மைய மண்டபத்தில், இம்மாதம் 14-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை 4 நாட்கள் மாநாடு நடக்கிறது.

    15-ந் தேதி, இந்த மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைப்பார் என்று தெரிகிறது.

    பாராளுமன்றங்களின் செயல்பாட்டில் செயற்கை நுண்ணறிவு, சமூக வலைத்தளங்கள் ஆகியவற்றை பயன்படுத்துவதுதான் மாநாட்டின் நோக்கமாக இருக்கும் என்று ஓம் பிர்லா கடந்த ஆண்டு தெரிவித்தார்.

    அதன்படி, மாநாட்டில், 'பாராளுமன்றத்தில் செயற்கை நுண்ணறிவு', சமூக வலைத்தளங்கள் மற்றும் பாராளுமன்றவாதிகளில் அவற்றின் தாக்கம்', 'பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பு, சுகாதாரம்' ஆகிய தலைப்புகளில் தனித்தனி அமர்வுகள் நடக்கின்றன.

    'வலிமையான ஜனநாயக அமைப்புகளை பராமரிப்பதில் சபாநாயகர்களின் பங்கு' என்ற சிறப்பு கருத்தரங்கும் நடைபெறும்.

    • இந்தியாவின் பெருமையை வெளிப்படுத்தும் வகையில் தேசிய கொடிகளை ஏந்தியபடி சென்றோம்.
    • சீனாவில் இருந்து தேசிய கொடியை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

    சென்னை:

    காமன்வெல்த் 65-வது சபாநாயகர்கள் மாநாடு கனடாவில் ஹாலிபேக்ஸ் நகரில் நடந்து வருகிறது. இந்த மாநாட்டில் பல்வேறு நாட்டு சபாநாயகர்கள், மாநிலங்களின் சபாநாயகர்கள் பங்கேற்றுள்ளார்கள்.

    இந்தியாவில் இருந்து பாராளுமன்ற சபாநாயகர் ஓம்பிர்லா, தமிழக சபாநாயகர் அப்பாவு ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.

    மாநாட்டு வளாகத்துக்கு சபாநாயகர்கள் சென்றபோது தங்கள் நாட்டு தேசிய கொடியை ஏந்தியபடி பேரணியாக சென்றனர். இந்திய சபாநாயகர்கள் கையில் பிடித்திருந்த தேசிய கொடியில் 'மேட் இன் சீனா' என்ற வாசகம் இடம் பெற்று இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    இதுபற்றி சபாநாயகர் அப்பாவுவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    இந்தியாவின் பெருமையை வெளிப்படுத்தும் வகையில் தேசிய கொடிகளை ஏந்தியபடி சென்றோம். அந்த கொடிகளில் 'மேட் இன் சீனா' என்று இருந்தது. அதை கண்டு பாராளுமன்ற சபாநாயகரிடம் தெரிவித்தோம்.

    எல்லோருக்கும் கஷ்டமாக இருந்தது. சீனாவில் இருந்து தேசிய கொடியை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

    இந்தியாவில் குறிப்பாக சிவகாசி, ஈரோடு, கரூர், நாமக்கல் பகுதிகளில் நிறைய பிரஸ்கள் உள்ளன. இரவு சொன்னால் காலையில் 100 கொடியை தருவார்கள். ஆனால் இந்த நிலை ஏன் ஏற்பட்டது என்று தெரியவில்லை என்றார்.

    ×