என் மலர்tooltip icon

    இந்தியா

    • அமெரிக்காவிற்கான ஏற்றுமதி மூலம் நமது நாட்டு மக்கள் ஈட்டி வந்த லாபம் இனி கிடைக்காது.
    • காங்கிரஸ் தனது இந்திய-எதிர்ப்பு மனநிலையைத் தெளிவுபடுத்துகிறது

    காங்கிரஸ் மூத்த தலைவர் பிரித்விராஜ் சவான் வெனிசுலா அதிபர் மதுரோவின் கைது குறித்து தெரிவித்த கருத்து இணையத்தில் கவனம் பெற்றுள்ளது. இந்தியப் பொருட்கள் மீதான அமெரிக்க வரிகள் குறித்து ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த அவர், 

    50 சதவீத வரியுடன் வர்த்தகம் செய்வது என்பது சாத்தியமே இல்லாத ஒன்று. நடைமுறையில், இது இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தகத்தை, குறிப்பாக இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு செய்யப்படும் ஏற்றுமதியைத் தடுப்பதற்குச் சமமாகும். முன்பு அமெரிக்காவிற்கான ஏற்றுமதி மூலம் நமது நாட்டு மக்கள் ஈட்டி வந்த லாபம் இனி கிடைக்காது. நாம் மாற்றுச் சந்தைகளைத் தேட வேண்டியிருக்கும், அதற்கான முயற்சிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுவிட்டன." என தெரிவித்தார்.


    பிரித்விராஜ் சவான்

    தொடர்ந்து மதுரோ கைது குறித்து பேசிய அவர், 

    "அப்படியானால் அடுத்தது என்ன என்ற கேள்வி எழுகிறது. வெனிசுலாவில் நடந்தது போன்ற ஒன்று இந்தியாவில் நடக்குமா? திரு. ட்ரம்ப் நமது பிரதமரைக் கடத்திச் செல்வாரா?" என தெரிவித்தார். 

    இவரின் இந்த கருத்துகள் விமர்சனங்களையும், கேலி, கிண்டல்களையும் பெற்றுவருகிறது. சமூக வலைதளத்தில் இவரின் இந்த கருத்துகளை பலரும் நகைச்சுவை செய்தாலும், பாஜகவினர் இந்த கருத்துக்கு தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். 

    "காங்கிரஸ் ஒவ்வொரு நாளும் ஒரு புதிய கீழ்த்தரமான நிலைக்குச் சென்றுகொண்டிருக்கிறது. காங்கிரஸ் தலைவர் பிருத்விராஜ் சவான் இந்தியாவின் நிலையை வெனிசுலாவுடன் வெட்கமின்றி ஒப்பிடுகிறார். 'வெனிசுலாவில் நடந்தது இந்தியாவில் நடக்குமா?' என்று கேட்பதன் மூலம், காங்கிரஸ் தனது இந்திய-எதிர்ப்பு மனநிலையைத் தெளிவுபடுத்துகிறது. ராகுல் காந்தி பாரதத்தில் குழப்பத்தை விரும்புகிறார். ராகுல் காந்தி பாரதத்தின் விவகாரங்களில் வெளிநாட்டினரின் தலையீட்டை நாடுகிறார்!" என பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் பிரதீப் பண்டாரி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    • கிரிமினல்கள், நக்சலைட்டுகள் மற்றும் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பியவர்கள், தற்போது விரக்தியடைந்துள்ளனர்.
    • அவர்களுடைய தீய திட்டம் ஒன்றன்பின் ஒன்றாக தகர்க்கப்பட்டு வருகின்றன.

    2020 டெல்லி வன்முறை சதி வழக்கில் உமர் காலித், ஷர்ஜீல் இமாம் ஆகியோருக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்தது. இதனைத்தொடர்ந்து டெல்லி ஜவர்ஹலால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவுக்கு எதிராக கோஷம் எழுப்பப்பட்டது. இது தொடர்பான வீடியோ வெளியானது. கோஷம் எழுப்பியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில், டெல்லி மாநில அமைச்சர் கபில் மிஸ்ரா கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக டெல்லி மாநில சட்டத்துறை அமைச்சர் கபில் மிஸ்ரா கூறுகையில் "பாம்புகள் நசுக்கப்படுகின்றன. பாம்பு குட்டிங்கள் அலறுகின்றன. கிரிமினல்கள், நக்சலைட்டுகள் மற்றும் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பியவர்கள், தற்போது விரக்தியடைந்துள்ளனர்.

    ஏனென்றால், அவர்களுடைய தீய திட்டம் ஒன்றன்பின் ஒன்றாக தகர்க்கப்பட்டு வருகின்றன. இதுபோன்ற கிரிமினல்களுக்கு ஆதரவு தெரிவிப்பவர்களை கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்" என்றார்.

    • ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நீக்கியது.
    • அத்துடன் மாநிலத்தை ஜம்மு-காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது.

    ஜம்மு- காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்ட சட்டப்பிரிவு 370-ஐ கடந்த 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5-ந்தேதி மோடி தலைமையிலான மத்திய அரசு நீக்கியது. அத்துடன் ஜம்மு-காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்கள் பிரிக்கப்பட்டன. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு இன்னும் மாநில அந்தஸ்து வழங்கப்படாமல் உள்ளது.

    இந்த நிலையில் ஜம்மு-காஷ்மீர் மாநில அமைச்சரான ஜாவித் ராணா, லடாக் ஒருங்கிணைந்த ஜம்மு-காஷ்மீரின் ஒரு பகுதியாவதற்கான நாள் வெகுதொலையில் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக ஜாவித் ராணா கூறுகையில் "லடாக் மீண்டும் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ஒரு பகுதியாவதற்கான நாள் வெகு தொலையில் இல்லை என நான் நம்புகிறேன். இதைத் தவிர இந்திய அரசுக்கு மாற்று வாய்ப்பு ஏதுமில்லை.

    நீங்கள் (மத்திய அரசு) ஒரு பகுதியை பாகிஸ்தானுக்குக் கொடுத்தீர்கள். கில்ஜித்-பால்டிஸ்தானும் பாகிஸ்தானுக்குக் கொடுக்கப்பட்டது. பிறகு லடாக்கைப் பிரித்தீர்கள். இப்போது நம்மிடம் இருப்பது ஜம்மு- காஷ்மீர் மட்டும்தான். இந்த நிலத்தை பிரித்தவர்களே, இப்போது கனக் மண்டியை (ஜம்முவில் உள்ள ஒரு பகுதி) கூட ஒரு மாநிலமாக மாற்ற விரும்புகிறார்கள்" என்றார்.

    • SIR தொடங்கியதிலிருந்து, அச்சத்தின் காரணமாகப் பலர் உயிரிழந்துள்ளனர்.
    • மேலும் பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    புதுடெல்லி:

    மார்ச்-ஏப்ரல் மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ள தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தத்தை மேற்கொண்டது. இதற்கு மேற்கு வங்க மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்.

    SIR அச்சம், துன்புறுத்தல் மற்றும் நிர்வாகத் தன்னிச்சையான செயல்களைத் தூண்டிவிட்டு, உயிரிழப்புகள், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு வழிவகுத்துள்ளது என குற்றம்சாட்டும் மம்தா பானர்ஜி, இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டுக்கு செல்வோம் என தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்தத்தில் தன்னிச்சையான தன்மை மற்றும் நடைமுறை முறைகேடுகள் இருக்கிறது என திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ'பிரையன் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

    மாநிலத்தில் வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்தம் செயல்முறை தொடங்கப்பட்டதில் இருந்து தேர்தல் ஆணையம் முறையான எழுத்துப்பூர்வ அறிவுறுத்தல்களை வழங்குவதற்குப் பதிலாக, "முறைசாரா மற்றும் சட்டத்திற்குப் புறம்பான சேனல்கள்" மூலம், வாட்ஸ்அப் செய்திகள் மற்றும் வீடியோ மாநாடுகளின்போது தெரிவிக்கப்படும் வாய்மொழி வழிமுறைகள் மூலம் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

    தேர்தல் ஆணையம் தன்னிச்சையாக, கேலிக்குரிய முறையில் செயல்படவோ அல்லது சட்டத்தை மீறவோ முடியாது. சட்டப்பூர்வமாக பரிந்துரைக்கப்பட்ட மற்றும் தற்காலிக அல்லது முறைசாரா வழிமுறைகளுடன் நடைமுறைகளை அமைக்கவோ முடியாது என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

    • உத்தர பிரதேச மாநிலத்தில் வாக்காளர் பட்டியலில் 12,55,56,025 பேர் இடம் பிடித்திருந்தனர்.
    • 18.70 சதவீதம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்.

    உத்தர பிரதேச மாநிலத்தில் கடந்த ஆண்டு நவம்பர்- டிசம்பர் மாதங்களில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் பணியை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. டிசம்பர் 26-ந்தேதி வரை மனுக்கள் பூர்த்தி செய்யப்பட்டு பெறப்பட்டன. பின்னர் அவைகள் பதிவேற்றம் செய்யப்பட்டன.

    இந்த நிலையில் இன்று வாக்காளர் வரைவு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 2025 அக்டோபர் 27-ந்தேதி வரை உத்தர பிரதேச மாநில வாக்காளர் பட்டியலில் 15,44,30,092 பேர் இடம் பிடித்திருந்தனர். SIR படிவத்தை 12,55,56,025 வாக்காளர்கள் பூர்த்தி செய்து ஒப்படைத்துள்ளனர். இது 81.30 சதவீதம் வாக்காளர்கள் ஆகும். இதன் மூலம் 18.70 சதவீதம் வாக்காளர்கள் அல்லது 2.89 கோடி வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.

    இதில் 46.23 லட்சம் வாக்காளர்கள் உயிரிழந்துள்ளனர். 2.57 கோடி வாக்காளர்கள் நிரந்தரமாக வேறு மாநிலத்திற்கு இடம் பெயர்ந்துள்ளனர். அல்லது படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்திருக்காதவர்கள். 25.47 லட்சம் வாக்காளர்கள் ஒன்றிற்கு மேற்பட்ட இடத்தில் இடம் பிடித்தவர்கள் என உத்தர பிரதேச மாநில தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

    ஆட்சேபனை தெரிவிப்பவர்கள், விடுபட்டவர்கள் ஜனவரி 6-ந்தேதியில் இருந்து பிப்ரவரி 6-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் திருடனை மீட்டு கைது செய்தனர்.
    • இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி சிரிப்பலைகளை ஏற்படுத்தியுள்ளன.

    ராஜஸ்தானின் கோட்டாவைச் சேர்ந்த சுபாஷ் குமார் ராவத் என்ற நபர் தனது மனைவியுடன் கோவிலிக்கு சென்று வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது அவரது வீட்டின் 'Exhaust' வழியாக ஒருவர் சிக்கி கொண்டுள்ளதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.

    இதையடுத்து பயத்தில் கத்திய ராவத் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் திருடனை மீட்டு கைது செய்தனர். தன்னுடைய கூட்டாளிகள் தன்னை தவிக்க விட்டு தப்பியோடியதாக கைதான திருடன் போலீசாரிடம் தெரிவித்தான்.

    இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி சிரிப்பலைகளை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக சுந்தர் சி இயக்கத்தில் வெளியான கலகலப்பு பட காட்சியை இபபடம் நியாபக படுத்துவதாக நெட்டிசன்கள் கிண்டல் அடித்தனர்.

    • நான் எந்த சாதனையையும் முறியடிப்பதற்காக அரசியல் செய்யவில்லை.
    • தேவராஜ் உர்ஸ் 2,792 நாட்கள் முதல்வராக இருந்துள்ளார்.

    கர்நாடக மாநிலத்தில் சித்தராமையா முதல்வராக இருந்து வருகிறார். காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்த போது சித்தரமையா இரண்டரை ஆண்டுகள், டி.கே. சிவக்குமார் இரண்டரை ஆண்டுகள் முதல்வராக இருப்பார்கள் என பேசப்பட்டதாக கூறப்படுகிறது.

    கடந்த ஆண்டு நவம்பர் மாதத்துடன் சித்தராமையாவின் இரண்டரை ஆண்டு பதவிக்காலம் முடிவடைந்தது. இதனால் டி.கே. சிவக்குமார் புதிய முதல்வராக பதவி ஏற்பார். கர்நாடக மாநில அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படும் என்று காங்கிரஸ் வட்டாரங்களில் கூறப்பட்டு வருகிறது.

    ஆனால், 5 ஆண்டுகள் முதலமைச்சர் பதவியை நிறைவு செய்வேன். காங்கிரஸ் கட்சி மேலிடம்தான் இது தொடர்பாக முடிவு செய்யும் என சித்தராமையா தொடர்ந்து பேசி வருகிறார்.

    இந்த நிலையில், தற்போது மீண்டும் 5 வருட முதலமைச்சர் பதவிக்காலத்தை நிறைவு செய்வேன் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும், வருகிற 7-ந்தேதியுடன் அதிக காலம் கர்நாடக மாநில முதல்வராக இருந்த தேவராஜ் உர்ஸ் சாதனையை முறியடிக்க இருக்கிறார். தேவராஜ் உர்ஸ் 2,792 நாட்கள் முதல்வராக இருந்துள்ளார். நாளையுடன் கர்நாடக முதல்வராக அதிக நாட்கள் பதவி வகித்தவர் என்ற பெருமையை சித்தராமையா பெற இருக்கிறார்.

    இது தொடர்பாக சித்தராமையா கூறியதாவது:-

    நான் எந்த சாதனையையும் முறியடிப்பதற்காக அரசியல் செய்யவில்லை. இது வெறும் தற்செயல் நிகழ்வுதான். தேவராஜ் உர்ஸ் எத்தனை வருடங்கள் மற்றும் எத்தனை நாட்கள் முதல்வராக இருந்தார் என்பது எனக்குத் தெரியாது. இன்று மக்களில் ஆசீர்வாதத்தால், தேவராஸ் உர்ஸ் சாதனையை சமன் செய்யும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

    5 வருட பதவிக் காலத்தை நிறைவு செய்வது குறித்து மேலிடம்தான் முடிவு செய்யும். மேலிடம் எப்போது முடிவு செய்யும் என்று எனக்குத் தெரியாது. எனக்கு நம்பிக்கை இருக்கிறது. எனக்கு நம்பிக்கை இல்லையென்றால், நான் எப்படி முதலமைச்சராகியிருப்பேன்?.

    இவ்வாறு சித்தராமையா தெரிவித்துள்ளார்.

    • மருத்துவமனையில் ஒரு வாரம் சிகிச்சையில் இருந்து வந்த அவர், சிகிச்சை பலனின்றி இறந்தார்.
    • சச்சிதானந்தத்தின் வீட்டு கிணற்று நீரின் மாதிரி பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமீபிக் மூளைக்காய்ச்சல் பரவத்தொடங்கியது. இந்த காய்ச்சலுக்கு பலர் இறந்துவிட்ட நிலையில், கோழிக்கோடு புதியங்காடி பகுதியை சேர்ந்த சச்சிதானந்தன்(வயது72) என்ற முதியவர் தற்போது இறந்திருக்கிறார்.

    மருத்துவமனையில் ஒரு வாரம் சிகிச்சையில் இருந்து வந்த அவர், சிகிச்சை பலனின்றி இறந்தார். அவருக்கு இந்த நோய் எப்படி பரவியது? என்பது தெரியவில்லை.

    இதற்காக சச்சிதானந்தத்தின் வீட்டு கிணற்று நீரின் மாதிரி பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் அமீபிக் மூளைக் காய்ச்சலுக்கு இதுவரை 40 பேர் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சோனியா காந்தி உடல்நிலை சீராக உள்ளது.
    • நுரையீரல் டாக்டரின் கண்காணிப்பில் சோனியா காந்தி உள்ளார்.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி பாராளுமன்ற காங்கிரஸ் குழு தலைவராக இருக்கிறார்.

    இந்த நிலையில் உடல் நலக்குறைவால் சோனியா காந்தி டெல்லியில் உள்ள கங்காராம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். வழக்கமான உடல் பரிசோதனைக்காக அவர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    இது தொடர்பாக ஆஸ்பத்திரி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சோனியா காந்தி உடல்நிலை சீராக உள்ளது. நாள்பட்ட இருமல் பிரச்சினை உள்ளதால் அவர் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்கு வந்துள்ளார். நுரையீரல் டாக்டரின் கண்காணிப்பில் உள்ளார்.

    டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசு காரணமாக அவர் தொடர்ந்து மருத்துவ பரிசோதனைக்கு வருகிறார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தனது காதல் தோற்றுப் போய்விட்டதாக கருதிய ஜெயபிரகாஷ், வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்று விட்டார்.
    • வெவ்வேறு நபர்களுடன் திருமண வாழ்க்கையை தொடங்கிய இருவருக்கும் குழந்தைகள் பிறந்தன.

    காதல்...

    அனைத்து உயிர்களுக்கும் பொதுவானது என்றால் அது "காதல்" தான். அதிலும் மனிதனின் காதல் தனித்துவமிக்கது. அது தரக்கூடிய உணர்வு மெய்சிலிர்க்க வைப்பதாக இருக்கும். அப்படிப்பட்ட காதலில் விழுந்து, வாழ்க்கையில் இணைந்தவர்களும் உண்டு. சந்தர்ப்ப சூழ்நிலைகளால் பிரிந்தவர்களும் உண்டு.

    அதே நேரத்தில் தனது மனம் விரும்பிய ஒருவரை கரம்பிடிக்க ஆண்டுக்கணக்கில் காத்திருந்து, பல ஆண்டுகளுக்கு பிறகு திருமண பந்தத்தில் இணைந்த ஜோடிகளும் உண்டு. அப்படித்தான் வாலிப பருவத்தில் காதலித்த இருவர், தற்போது 60 வயதுக்கு பிறகு திருமணம் செய்துள்ளனர்.

    கேரளாவில் அரங்கேறியிருக்கும் அந்த ருசிகர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

    கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் முண்டக்கல் பகுதியை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ். இவர் தனது வாலிப பருவத்தில் ரஷ்மி என்ற பெண்ணை காதலித்துள்ளார். ஆனால் அதனை அவரிடம் கூற பயந்திருக்கிறார். பின்பு வெகுநாட்களுக்கு பிறகு தனது காதலை வெளிப்படுத்தி இருக்கிறார்.

    இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்த நிலையில், ரஷ்மிக்கு அவரது பெற்றோர் வேறு ஒருவருடன் திருமணம் செய்து வைத்தனர். தனது காதல் தோற்றுப் போய்விட்டதாக கருதிய ஜெயபிரகாஷ், வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்று விட்டார்.

    இறுதியில் அவரும் திருமணம் செய்து கொண்டார். வெவ்வேறு நபர்களுடன் திருமண வாழ்க்கையை தொடங்கிய இருவருக்கும் குழந்தைகள் பிறந்தன. அவர்கள் தங்களது குடும்பத்துடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்த நிலையில் இருவரின் துணைகளும் அடுத்தடுத்து இறந்தனர்.

    ரஷ்மியின் கணவர் 10 ஆண்டுகளுக்கு முன்பும், ஜெயபிரகாசின் மனைவி 5 ஆண்டுகளுக்கு முன்பும் திடீரென இறந்துவிட்டனர். இதையடுத்து அவர்கள் தங்களின் குழந்தைகளே வாழ்க்கை என நினைத்து, வேறு திருமணம் செய்யாமல் வாழ்ந்து வந்தனர்.

    கணவரை இழந்த வேதனையிலிருந்து மீள்வதற்காக ரஷ்மி, கலாச்சார நிகழ்வுகளில் ஈடுபட்டார். மேலும் குறும்படங்களில் நடிக்க தொடங்கினார். ஜெயபிரகாஷ் தனது குழந்தைகளின் வற்புறுத்தலின் பேரில் மறுமணம் செய்ய திட்டமிட்டார். அதற்காக பெண் தேடும் படலத்திலும் ஈடுபட்டார்.

    இந்தநிலையில் ரஷ்மி நடித்த ஒரு குறும்படத்தை ஜெயபிரகாஷ் பார்த்தார். தனது வாலிப பருவ காதலி குறும்படங்களில் நடிப்பதை அறிந்து அவர் உள்ளத்தில் மகிழ்ந்தார். அவரை தொடர்பு கொண்டு பேச துடித்தார். இறுதியில் குறும்பட இயக்குனரிடமிருந்து ரஷ்மியின் மகள் செல்போன் எண்ணை வாங்கினார்.

    அதில் தொடர்பு கொண்டு ரஷ்மியிடம் பேசினார். இதையடுத்து அவர்களுக்கு இடையே பழைய உறவு மீண்டும் துளிர்விட்டது. அதே நேரத்தில் இருவரின் துணைகளும் இறந்த விவரத்தை இருவரும் அறிந்துகொண்டனர். தற்போது மறுமணத்துக்கு பெண் தேடி வரும் விவரத்தை ரஷ்மியிடம் ஜெயபிரகாஷ் தெரிவித்தார்.

    அப்போது நாம் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்ற கருத்தையும் அவர் முன் வைத்தார். அதுபற்றி ரஷ்மி தனது மகள் மற்றும் மருமகனிடம் கூறினார். அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள சம்மதித்தனர்.

    இதையடுத்து ரஷ்மி திருமணம் செய்துகொள்ள சம்மதிப்பதாக ஜெயபிரகாஷிடம் தெரிவித்தார். உடனே அவர்களது திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடந்தன. 60 வயதுக்கும் மேல் ஆகிவிட்ட நிலையில் இருவரின் திருமணம் கொச்சியில் மிகவும் எளிமையான முறையில் நடந்தது.

    அதில் ஜெயபிரகாஷ்-ரஷ்மி ஆகிய இருவரின் குழந்தைகள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் சிலர் மட்டுமே கலந்து கொண்டனர். இருவரின் திருமணத்தை அவர்களது குழந்தைகள் முன்னின்று நடத்தி வைத்தனர். "உண்மையான காதல் நிச்சயம் ஒரு நாள் ஜெயிக்கும்" என்பதற்கு சாட்சியாக வாலிப வயதில் காதலித்த ஜோடி, தங்களின் 60 வயதிற்கு பிறகு ஒன்றிணைந்துள்ளனர்.

    ஜெயபிரகாஷ்-ரஷ்மி ஆகிய இருவரின் திருமண புகைப்படத்தை ரஷ்மியின் மகள் சமூக வலைதளங்களில், "எந்த குழந்தைகளுக்கு இந்த அதிர்ஷ்டம் கிடைக்கும்" என்ற நெகிழ்ச்சியான வாசகத்துடன் பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சுரேஷ் கல்மாடி அரசியல் மற்றும் விளையாட்டுகளில் முக்கிய பொறுப்பு வகித்தவர் ஆவார்.
    • காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் நடந்த ஊழல் குற்றச்சாட்டில் அவர் கைதாகி விடுதலை ஆனார்.

    காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான சுரேஷ் கல்மாடி நீண்டகாலமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தார்.

    புனேயில் உள்ள தீனநாத் மங்கேஷ்கர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுரேஷ் கல்மாடி இன்று அதிகாலை 3.30 மணியளவில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 81.

    அவரது மறைவுக்கு அரசியல் பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். சுரேஷ் கல்மாடியின் உடல் புனேயின் எரண்ட்வானேயில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. காங்கிரஸ் பிரமுகர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். இன்று மாலை நவிபெத்தில் உள்ள வை குந்த் ஸ்மஷன் பூமியில் இறுதி சடங்கு நடக்கிறது.

    சுரேஷ் கல்மாடி அரசியல் மற்றும் விளையாட்டுகளில் முக்கிய பொறுப்பு வகித்தவர் ஆவார். அவர் 1944-ம் ஆண்டு மே 1-ந் தேதி புனேயில் பிறந்தார். இந்திய விமான படையில் 1964 முதல் 1972 வரை பணியாற்றினார். 1974-ம் ஆண்டு ஓய்வு பெற்றார். அதன் பின்னர் அரசியலில் நுழைந்தார்.

    சுரேஷ் கல்மாடி 1995 முதல் 1996-ம் ஆண்டுகளுக்கு இடையிலான காங்கிரஸ் மந்திரி சபையில் ரெயில்வே இணை மந்திரியாக பணியாற்றினார்.

    அவர் 3 முறை பாராளுமன்ற மக்களவை (1996, 2004, 2009) எம்.பி.யாக இருந்தார். 1982, 1988, 1994, 1998 ஆகிய 4 தடவை மேல் சபை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    சுரேஷ் கல்மாடி இந்திய ஒலிம்பிக் சங்க தலைவராக நீண்டகாலம் பணியாற்றியவர் ஆவார். 1996 முதல் 2011 வரை 15 ஆண்டுகள் அவர் அந்த பொறுப்பில் பணியாற்றினார்.

    அவர் ஆசிய தடகள சம்மேளனத்தின் தலைவராகவும் இருந்தார். சர்வதேச தடகள சம்மேளனத்தின் உறுப்பினராகவும் பணியாற்றினார். இந்திய விளையாட்டு துறையில் வலிமை மிக்க நிர்வாகியாக இருந்தவர் ஆவார். அவரது தலைமையின் கீழ் 2010-ம் ஆண்டு டெல்லியில் காமன்வெல்த் விளையாட்டு போட்டி நடைபெற்றது.

    காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் நடந்த ஊழல் குற்றச்சாட்டில் அவர் கைதாகி விடுதலை ஆனார். இந்த வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டிருந்தார்.

    சுரேஷ் கல்மாடிக்கு மனைவி, மகன், மருமகள், 2 மகள்கள், மருமகன்கள் மற்றும் பேரக்குழந்தைகள் உள்ளனர்.

    • அங்கீகரிக்கப்படாத நீரேற்று திட்டங்களை கர்நாடகம் தங்களது பாசனத்துக்காக செயல்படுத்தக்கூடாது என்று வற்புறுத்தினர்.
    • தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா மற்றும் புதுச்சேரிக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

    புதுடெல்லி:

    காவிரி மேலாண்மை ஆணையத்தின் 46-வது கூட்டம் கடந்த மாதம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் டிசம்பர் மாதத்துக்கு 7.35 டி.எம்.சி. தண்ணீரை தமிழக அதிகாரிகள் கேட்டனர். மேலும் அங்கீகரிக்கப்படாத நீரேற்று திட்டங்களை கர்நாடகம் தங்களது பாசனத்துக்காக செயல்படுத்தக்கூடாது என்றும் வற்புறுத்தினர்.

    இந்தநிலையில் ஆணையத்தின் 47-வது கூட்டம் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு டெல்லியில் உள்ள மேலாண்மை ஆணைய அலுவலகத்தில் நடக்கிறது. இதில் பங்கேற்க தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா மற்றும் புதுச்சேரிக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

    ×