என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
துருக்கி, சிரியாவுக்கு இந்தியாவின் நிவாரண பொருட்களுடன் 7-வது விமானம் சென்றடைந்தது
- ஆபரேஷன் தோஸ்த் என்ற பெயரில் இந்திய பேரிடர் மீட்புக்குழு மீட்புப்பணிகளை மேற்கொண்டு வருகிறது.
- நிலநடுக்கத்தால் பாதிப்பு அடைந்தவர்களுக்கு இந்தியா தொடர்ந்து நிவாரண பொருட்களும் அனுப்பப்பட்டு வருகின்றன.
புதுடெல்லி:
பயங்கர நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டு உள்ள துருக்கி மற்றும் சிரியாவில் ஆபரேஷன் தோஸ்த் என்ற பெயரில் இந்திய பேரிடர் மீட்புக் குழுவினர் தீவிரமாக மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்தியா சார்பில் தொடர்ந்து நிவாரண பொருட்களும் அனுப்பப்பட்டு வருகின்றன. உணவு பொருட்கள், மருந்துகள், போர்வைகள் என ஏராளமான பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளன.
இந்நிலையில், மேலும் ஏராளமான நிவாரண பொருட்களுடன் 7-வது இந்திய விமானப்படை விமானம் நேற்று இரு நாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.
இதில் சோலார் விளக்குகள், அவசர கால மருந்துகள் உள்பட 35 டன் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இதில் 23 டன் பொருட்கள் சிரியா தலைநகர் டமாஸ்கசுக்கும், 12 டன் பொருட்கள் துருக்கிக்கும் வழங்கப்பட்டன.
இந்தியா அனுப்பிய பொருட்களை டமாஸ்கசில் அந்நாட்டு உள்ளாட்சி மற்றும் சுற்றுச்சூழல் துணை மந்திரி மவுதாஸ் டவாஜி பெற்றுக்கொண்டார் என மத்திய வெளியுறவு செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தெரிவித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்