search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கொரோனா பரிசோதனை (கோப்புப்படம்)
    X
    கொரோனா பரிசோதனை (கோப்புப்படம்)

    தினசரி பாதிப்பு சற்று அதிகரிப்பு- இந்தியாவில் புதிதாக 2,828 பேருக்கு கொரோனா

    நாடு முழுவதும் நேற்று 13,81,764 டோஸ்களும், இதுவரை 193 கோடியே 28 லட்சம் டோஸ் தடுப்பூசிகளும் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,828 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இதில் அதிகபட்சமாக கேரளாவில் 879, மகாராஷ்டிராவில் 529, டெல்லியில் 442, அரியானாவில் 227, கர்நாடகாவில் 196, உத்தரபிரதேசத்தில் 134 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.

    நேற்று பாதிப்பு 2,685 ஆக இருந்தது. இந்நிலையில் தினசரி பாதிப்பு இன்று சற்று அதிகரித்துள்ளது.

    இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 31 லட்சத்து 53 ஆயிரத்து 43 ஆக உயர்ந்தது.

    தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த 2,035 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 26 லட்சத்து 11 ஆயிரத்து 370 ஆக உயர்ந்தது.

    தற்போது 17,087 பேர் சிகிச்சையில் உள்ளனர். இது நேற்றை விட 779 அதிகம் ஆகும்.

    கேரளாவில் திருத்தப்பட்ட பட்டியலில் சேர்க்கப்பட்ட 13 மரணங்கள் மற்றும் நேற்று ஜார்க்கண்டில் ஒருவர் என மேலும் 14 பேர் இறந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5,24,586 ஆக உயர்ந்துள்ளது.

    நாடு முழுவதும் நேற்று 13,81,764 டோஸ்களும், இதுவரை 193 கோடியே 28 லட்சம் டோஸ் தடுப்பூசிகளும் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது.

    இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்படி நேற்று 4,74,309 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மொத்த பரிசோதனை எண்ணிக்கை 84.97 கோடியாக உயர்ந்துள்ளது.

    Next Story
    ×