என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
டெல்லி தீ விபத்து ஏற்பட்ட வணிக வளாக கட்டிட உரிமையாளர் கைது
Byமாலை மலர்15 May 2022 6:06 AM GMT (Updated: 15 May 2022 6:06 AM GMT)
டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், இறந்தவர்களின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்தார்.
புதுடெல்லி:
டெல்லி மேற்கு பகுதியில் உள்ள முன்ட்கா மெட்ரோ ரெயில் நிலையம் அருகே 3 அடுக்குமாடி அலுவலக கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடடத்தில் நேற்று முந்தினம் மாலை 4.45 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இந்த தீ விபத்தில் 27 பேர் உடல் கருகி பலியானார்கள். 12 பேர் காயமடைந்தனர். 70க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டனர். சிலர் மாடியில் இருந்து குதித்து தப்பினர். இந்த விபத்து நடந்த பகுதியை நேரில் பார்வையிட்ட டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், இறந்தவர்களின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்தார். மேலும் காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் நிவாரணம் அறிவித்தார்.
இந்நிலையில் தற்போது தீ விபத்து ஏற்பட்ட வணிக வளாக கட்டிடத்தின் உரிமையாளர் மணிஷ் லக்ராவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வணிக வளாக கட்டிடத்தை பாதுகாப்பு இல்லாத வகையில் கட்டியதற்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X