search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Delhi fire accident"

    • வாகன நிறுத்துமிடத்தில் ஏற்பட்ட தீ, கட்டிடம் முழுவதும் பரவியது.
    • கட்டிடத்தில் குடியிருந்தவர்கள் அலறியடித்து வெளியே ஓடி வந்தனர்.

    டெல்லி:

    டெல்லி ஷஹ்தராவில் உள்ள சாஸ்திரி நகர் பகுதியில் குடியிருப்பு கட்டிடம் ஒன்று உள்ளது. 4 மாடிகளை கொண்ட இந்த குடியிருப்பு கட்டிடத்தில் பலர் வசித்து வருகின்றனர்.

    இந்த குடியிருப்பு கட்டிடத்தில் இன்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. வாகன நிறுத்துமிடத்தில் ஏற்பட்ட தீ, கட்டிடம் முழுவதும் பரவியது. இதனால் கட்டிடத்தில் குடியிருந்தவர்கள் அலறியடித்து வெளியே ஓடி வந்தனர். தீ விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    எனினும் இந்த தீ விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 4 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்த சிலரை மீட்டு உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தீ விபத்து தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    தீ விபத்தில் கட்டிடத்தின் கீழ் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிள்கள் உள்பட 10 வாகனங்கள் எரிந்து சேதம் அடைந்தது.
    புதுடெல்லி:

    டெல்லி துவாராகா பகுதியில் உள்ள 4 மாடி கட்டிடத்தில் 52 பேர் வசித்து வருகிறார்கள். இந்த கட்டிடத்தின் மீட்டர் பெட்டியில் இன்று அதிகாலை சுமார் 1.30 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பற்றி எரிந்தது.

    இது பற்றிய தகவல் அறிந்ததும் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். மேலும் கட்டிடத்தில் சிக்கி தவித்த 4 குழந்தைகள் 24 பெண்கள் உள்பட 52 பேரை மீட்டனர். இதில் 5 பேருக்கு தீக்காயம் ஏற்பட்டது. அவர்கள் சிசிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

    இந்த தீ விபத்தில் கட்டிடத்தின் கீழ் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிள்கள் உள்பட 10 வாகனங்கள் எரிந்து சேதம் அடைந்தது. தீப்பிடித்தற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. சம்பவம் நடந்த பகுதியில் ஏராளமான கட்டிடங்கள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
    டெல்லி கரோல்பாக் பகுதி அருகேயுள்ள ஒரு தொழிற்சாலையில் இன்று தீவிபத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர். #KarolBaghfactoryfire #fourdead
    புதுடெல்லி:

    டெல்லியின் மத்திய பகுதியான கரோல்பாக் அருகேயுள்ள பீடோன்புரா என்னும் இடத்தில் வீடுகளுக்கு இடையில் இயங்கிவந்த  ஒரு தொழிற்சாலையில் இன்று  பிற்பகல் சுமார் 12.30 மணியளவில் தீவிபத்து ஏற்பட்டது.

    தகவல் அறிந்து இரு வாகனங்களில் விரைந்துவந்த தீயணைப்பு படையினர், தீயை அணைத்து, உடல் கருகி கிடந்த 4 பிரேதங்களை கண்டெடுத்தனர்.


    இவ்விபத்தில் இறந்தவர்கள் பகன் பிரஷாத்(55), நரேஷ்(40), ஆஷா(40), ஆர்த்தி(20) என தெரியவந்துள்ளது. இந்த விபத்துக்கான காரணம் தொடர்பாக கரோல்பாக் போலீசார் விசாரித்து வருகின்றனர். #KarolBaghfactoryfire #fourdead
    ×