என் மலர்
இந்தியா

டெல்லியில் பயங்கர தீ விபத்து: 17 கார்கள் எரிந்து சாம்பல்
- 5 கடைகள் முழுமையாக எரிந்து சாம்பலானது.
- தீயணைப்பு படை வீரர்கள் சுமார் 4 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
புதுடெல்லி:
டெல்லியின் வடக்கு பகுதியில் சாந்தினிசவுக் அருகே பதேபுரி மஸ்ஜித் என்ற இடத்தில் பல்வேறு பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் அதிகம் உள்ளன. இன்று அதிகாலை 3 மணிக்கு அங்குள்ள கடைகளில் திடீரென தீப்பிடித்தது.
5 கடைகள் முழுமையாக எரிந்து சாம்பலானது. கிழக்கு டெல்லியில் மதுவிகார் என்ற இடத்தில் ஏற்பட்ட மற்றொரு தீ விபத்தில் மாநகராட்சி கார் நிறுத்தும் இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 17 கார்கள் முழுமையாக எரிந்து சாம்பலானது.
தீயணைப்பு படை வீரர்கள் சுமார் 4 மணி நேரம் போராடி அந்த தீயை அணைத்தனர்.
#WATCH | Several cars were gutted in a fire at a parking lot near police station Mandavali in the Madhu Vihar area of Delhi. The fire which broke out last night around 1:17 AM has been brought under control. pic.twitter.com/9x2uadJbAL
— ANI (@ANI) May 29, 2024
Next Story






