என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
நிதிஷ்குமார் பங்கேற்ற நிகழ்ச்சியில் வெடிகுண்டு வீசிய நபர் கைது
Byமாலை மலர்12 April 2022 1:29 PM GMT (Updated: 12 April 2022 1:29 PM GMT)
பீகார் முதல்வரின் பாதுகாப்பில் ஏற்பட்டுள்ள குறைபாடு அம்மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
நாளந்தா:
பீகார் மாநிலம் நாளந்தா நகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அம்மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் கலந்து கொண்டார். அப்போது மேடை அருகே வெடிகுண்டு வீசப்பட்டது. எனினும் இதில் யாரும் காயம் அடையவில்லை.
உடனடியாக அங்கிருந்த போலீசார் நிதிஷ்குமாரை பத்திரமாக அழைத்துச் சென்றனர். வெடிகுண்டை வீசியதாக சந்தேகிக்கப்படும் நபரை கைது செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
முன்னதாக பாட்னாவிற்கு அருகிலுள்ள பக்தியார்பூரில் கடந்த மாதம் மார்ச் 27ந் தேதி சுதந்திரப் போராட்டத் தியாகியின் சிலைக்கு நிதிஷ்குமாரை மலர் தூவி மரியாதை செலுத்திக் கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அவரை தாக்கினார்.
இந்த சம்பவம் அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது அவர் பங்கேற்ற நிகழ்ச்சியில் வெடிகுண்டு வீசப்பட்டுள்ளது. பீகார்
முதல்வரின் பாதுகாப்பில் ஏற்பட்டுள்ள குறைபாடு அம்மாநிலம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை எழுப்பி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X