search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சுப்ரீம் கோர்ட்
    X
    சுப்ரீம் கோர்ட்

    4-ந்தேதி முதல் முழு அளவில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்குகள் நேரடி விசாரணை

    நாளையுடன் கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்படுவதால் வருகிற 4-ந்தேதி (திங்கட்கிழை) முதல் சுப்ரீம் கோர்ட்டில் முழு அளவில் வழக்குகள் அனைத்தும் நேரடி விசாரணை நடத்தப்படும் என தலைமை நீதிபதி என்.வி. ரமணா தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    கொரோனா பரவல் காரணமாக சுப்ரீம் கோர்ட்டில் காணொலி காட்சி மூலம் வழக்குகள் விசாரணை நடந்து வந்தது. வாரத்தில் 2 நாட்கள் மட்டுமே நேரடி விசாரணை நடந்தது.

    இந்த நிலையில் நாளையுடன் கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்படுவதால் வருகிற 4-ந்தேதி (திங்கட்கிழை) முதல் சுப்ரீம் கோர்ட்டில் முழு அளவில் வழக்குகள் அனைத்தும் நேரடி விசாரணை நடத்தப்படும் என தலைமை நீதிபதி என்.வி.ரமணா தெரிவித்துள்ளார்.

    வக்கீல்கள் கோரிக்கை வைத்தால் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் காணொலி வாயிலாக விசாரணை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
    Next Story
    ×