என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
பஞ்சாப் தேர்தல்: வாக்குச்சாவடிக்குள் நுழைய முயன்ற நடிகர் சோனு சூட்டின் கார் பறிமுதல்
Byமாலை மலர்20 Feb 2022 10:10 AM GMT (Updated: 20 Feb 2022 10:10 AM GMT)
பஞ்சாப் தேர்தலில் பாலிவுட் நடிகர் சோனு சூட்டின் சகோதரி மாளவிகா சூத் மோகா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக களம் இறங்கியுள்ளார்.
பஞ்சாப் மாநில சட்டசபையின் 117 தொகுதிகளுக்கான ஒரே கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கியது. காலை 8 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் வாக்காளர்கள் ஆர்வமாக வந்து வாக்களித்து செல்கின்றனர்.
இந்த தேர்தலில் பாலிவுட் நடிகர் சோனு சூட்டின் சகோதரி மாளவிகா சூத் மோகா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுகிறார். இந்த ஆண்டு ஜனவரி 10-ம் தேதி காங்கிரஸில் இணைந்தார்.
இந்நிலையில், மோகா மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடிக்குள் நுழைய முயன்ற சோனு சூட்டின் காரை பஞ்சாப் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். பின்னர் அவரை தடுத்து நிறுத்தி வீட்டிற்கு அனுப்பியுள்ளனர்.
இதுகுறித்து நடிகர் சோனு சூட் கூறியதாவது:-
அகாலிதளம் உள்பட எதிர்கட்சிகளிடம் இருந்து பல்வேறு வாக்குச்சாவடிகளுக்கு மிரட்டல் வந்துள்ளது. சில வாக்குச்சாவடிகளில் பணம் விநியோகிக்கப்படுவதாகவும் தகவல் தெரிந்தது. சோதனை செய்து நியாயமான தேர்தலை நடத்துவது எங்கள் கடமை. அதனால்தான் நாங்கள் வெளியே சென்றோம்.
இப்போது நாங்கள் வீட்டில் இருக்கிறோம். நியாயமான தேர்தல் நடைப்பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படியுங்கள்.. தொலைதூரத்தில் இருக்கும் வீரர்களுக்கு தடுப்பூசிகளை ட்ரோனில் அனுப்ப இந்திய ராணுவம் ஏற்பாடு
இந்த தேர்தலில் பாலிவுட் நடிகர் சோனு சூட்டின் சகோதரி மாளவிகா சூத் மோகா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுகிறார். இந்த ஆண்டு ஜனவரி 10-ம் தேதி காங்கிரஸில் இணைந்தார்.
இந்நிலையில், மோகா மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடிக்குள் நுழைய முயன்ற சோனு சூட்டின் காரை பஞ்சாப் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். பின்னர் அவரை தடுத்து நிறுத்தி வீட்டிற்கு அனுப்பியுள்ளனர்.
இதுகுறித்து நடிகர் சோனு சூட் கூறியதாவது:-
அகாலிதளம் உள்பட எதிர்கட்சிகளிடம் இருந்து பல்வேறு வாக்குச்சாவடிகளுக்கு மிரட்டல் வந்துள்ளது. சில வாக்குச்சாவடிகளில் பணம் விநியோகிக்கப்படுவதாகவும் தகவல் தெரிந்தது. சோதனை செய்து நியாயமான தேர்தலை நடத்துவது எங்கள் கடமை. அதனால்தான் நாங்கள் வெளியே சென்றோம்.
இப்போது நாங்கள் வீட்டில் இருக்கிறோம். நியாயமான தேர்தல் நடைப்பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படியுங்கள்.. தொலைதூரத்தில் இருக்கும் வீரர்களுக்கு தடுப்பூசிகளை ட்ரோனில் அனுப்ப இந்திய ராணுவம் ஏற்பாடு
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X