search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    செல்போன்
    X
    செல்போன்

    கேரளாவில் அரசு பஸ்களில் செல்போனில் சத்தமாக பேச, பாட்டு கேட்க தடை

    கேரளாவில் அரசு பஸ்களில் பயணிக்கும் பயணிகள் யாரும் சத்தமாக செல்போன் பேசவோ, பாட்டு கேட்கவோ செய்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

    திருவனந்தபுரம்:

    மத்திய அரசு சமீபத்தில் ரெயில்களில் பயணம் செய்யும் பயணிகள் செல்போனில் சத்தமாக பேசுவது, பாடல் கேட்பது போன்ற சக பயணிகளை தொந்தரவு செய்யும் செயல்களுக்கு தடை விதித்தது.

    இதன் தொடர்ச்சியாக கேரள அரசு பஸ்களிலும் பயணம் செய்யும் பயணிகள் செல்போனில் சத்தமாக பேசுவதால் சக பயணிகளுக்கு இடையூறு ஏற்படுவதாக கேரள அரசு போக்குவரத்து கழகத்திற்கு தொடர்ச்சியாக புகார்கள் வந்தது.

    கேரள அரசு பஸ்

    இந்நிலையில் நேற்று கேரள அரசு போக்குவரத்து கழகம் அனைத்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதன்படி இனி கேரளாவில் அரசு பஸ்களில் பயணிக்கும் பயணிகள் யாரும் சத்தமாக செல்போன் பேசவோ, பாட்டு கேட்கவோ செய்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

    சக பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்துபவரை பற்றிய தகவல் தெரிவிக்க வசதியாக இந்த அறிவிப்பை அனைத்து பஸ்களின் தகவல் பலகையில் ஒட்ட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இதையும் படியுங்கள்... உத்தர பிரதேசத்தில் 3-வது கட்ட தேர்தல்- 59 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது

    Next Story
    ×