என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
திருச்சூரில் போதை மருந்து பயன்படுத்திய பயிற்சி டாக்டர் கைது
திருவனந்தபுரம்:
கேரளாவின் திருச்சூர் பகுதியில் போதை பொருள் நடமாட்டம் இருப்பதாக போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து திருச்சூர் மருத்துவ கல்லூரி பகுதியில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இதில் மருத்துவ கல்லூரி மாணவர்கள் தங்கியுள்ள விடுதியில் போதை பொருள்பயன்பாடு இருப்பது தெரியவந்தது.
போலீசார் நேற்று அங்குள்ள மாணவர் விடுதிக்குள் அதிரடியாக நுழைந்து சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது விடுதியில் இருந்த பயிற்சி டாக்டர் அகில் முகமது உசேன் என்பவரிடம் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் இருப்பதை கண்டுபிடித்தனர்.
அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் போதை பொருட்களை அவர் ஐதராபாத் மற்றும் பெங்களூருவில் இருந்து வாங்கியதாக தெரிவித்தார். மேலும் அங்கு 15 பேர் வரை போதை பொருட்களை பயன்படுத்தி வந்ததும் தெரியவந்தது. அவர்களையும் பிடிக்க போலீசார் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்