என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
சோப்பு வாங்கியவர்களுக்கு குலுக்கலில் பரிசு விழுந்ததாக நூதன மோசடி
திருப்பதி:
ஆந்திர மாநிலம் சித்தூர் பழைய பிரசாந்த் நகரை சேர்ந்தவர் நவீனா (வயது31). கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரசாந்த் நகருக்கு வீடு வீடாக வந்த 2 வாலிபர்கள் 100 ரூபாய்க்கு தரமான 5 சோப்புகளை வழங்குவதாக கூறினர். நவீனா 100 ரூபாய் கொடுத்து 5 சோப்புகளை வாங்கினார். சோப்பு வாங்குபவர்களுக்கு குலுக்கல் முறையில் பரிசு விழுந்தால் இலவசமாக வழங்குவதாக தெரிவித்தனர்.
இதையடுத்து வாலிபர்கள் 2 பேரும் ஒரு டப்பாவில் சீட்டுகளை போட்டு நவீனாவை எடுக்க கூறினர். நவீனா எடுத்த சீட்டில் பைக், வாஷிங் மெஷின், மிக்ஸி, கிரைண்டர், தோசை தவா உள்ளிட்ட 5 பொருட்கள் பரிசு விழுந்ததாக அந்த சீட்டில் இருந்தது.
பின்னர் அந்த வாலிபர்கள் நவீனாவின் செல்போன் மற்றும் முகவரியை வாங்கி கொண்டு சென்றனர். 2 நாட்கள் கழித்து உங்களுக்கு ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் பரிசு விழுந்ததாகவும், குறிப்பிட்ட வங்கி எண்ணிற்கு ரூ.25 ஆயிரம் செலுத்தினால் உங்கள் வீடு தேடி பரிசு பொருட்கள் வரும் என கூறினர்.
இதனை உண்மை என நம்பிய நவீனா அவர்கள் கொடுத்த வங்கி எண்ணிற்கு ரூ.25 ஆயிரத்தை செலுத்தினார். ஆனால் வங்கியில் பணம் செலுத்தி பல நாட்கள் ஆகியும் பரிசுப் பொருட்கள் வீடு தேடி வரவில்லை. வாலிபர்கள் பேசிய செல்போன் எண்ணிற்கு நவீனா தொடர்பு கொண்டார். ஆனால் செல்போன் சுவிட்ச்ஆப் செய்யப்பட்டு இருந்தது.
இது குறித்து நவீனா சித்தூர் போலீசில் புகார் அளித்தார். இதேபோல் சித்தூர் லெனின் நகர் காலனியை சேர்ந்த தீபக் என்பவரும் ரூ.18 ஆயிரம் ஏமாந்ததாகக் கூறி சித்தூர் போலீசில் புகார் தெரிவித்தார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து நூதன முறையில் பண மோசடி செய்த சோப்பு வியாபாரிகளின் செல்போன் எண்ணை வைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்