search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்
    X
    டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்

    துப்புரவுத் தொழிலாளர்களுக்கு சலுகைகள் - பஞ்சாப்பில் கெஜ்ரிவால் வாக்குறுதி

    சாக்கடையை சுத்தம் செய்ய,இயந்திரங்கள் வழங்கப்படும் என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
    அமிர்தசரஸ்:

    விரைவில் பஞ்சாப் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், டெல்லி முதலமைச்சரும், ஆம்ஆத்மி கட்சி தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்வரிவால் அம்மாநிலத்தில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அமிர்தசரஸ் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் கெஜ்ரிவால் பேசியதாவது:

    பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றிபெற முடிந்தால், தற்காலிக துப்புரவுப் பணியாளர்களை நிரந்தரமாக்குவோம். துப்புரவு பணியாளர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து தரப்படும். அவர்கள் கைகளை பயன்படுத்தாமல் சாக்கடை சுத்தம் செய்ய இயந்திரங்கள் வழங்கப்படும்.

    பட்டியலின குடும்பங்களில் இருந்து வரும் அனைத்து குழந்தைகளுக்கும் சிறந்த கல்வி வழங்கப்படும். பாபா சாகேப் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார்.

    இருப்பினும் சுதந்திரம் அடைந்து பல ஆண்டுகளாகியும், தலித் சமூகம் இன்னும் நல்ல கல்வியைப் பெறவில்லை. டெல்லியை போன்று பஞ்சாபிலும் அரசுப் பள்ளிகளை மேம்படுத்த விரும்புகிறோம். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

    Next Story
    ×