என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
சாமியார் காளிச்சரணை மகாராஷ்டிர போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்கும் - அமைச்சர் தகவல்
Byமாலை மலர்30 Dec 2021 12:08 PM GMT (Updated: 30 Dec 2021 12:39 PM GMT)
சாமியார் காளிச்சரண் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனறு மகாராஷ்டிர மாநில உள்துறை அமைச்சர் திலிப் வல்சே தெரிவித்தார்.
நாக்பூர்:
மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த இந்து மத தலைவர் காளிச்சரண், கடந்த 26-ம் தேதி சத்தீஸ்கர் மாநிலம் ராயப்பூரில் நடைபெற்ற ஆன்மீக மாநாட்டில் பங்கேற்று பேசியபோது, மகாத்மா காந்தி குறித்து தரக்குறைவான வார்த்தையை பயன்படுத்தி பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியினர் அளித்த புகாரை அடுத்து காளிச்சரண் மீது ராய்ப்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். அவரை மத்திய பிரதேச மாநிலம் கஜுராஹோ அருகே இன்று அதிகாலையில் கைது செய்தனர்.
இதேபோல் மகாராஷ்டிர மாநிலத்திலும் சாமியார் காளிச்சரண் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, மகாராஷ்டிர போலீசார் காளிச்சரணை காவலில் எடுத்து விசாரிக்க உள்ளதாக மாநில உள்துறை அமைச்சர் திலிப் வல்சே தெரிவித்தார். மேலும், காளிச்சரண் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும் எனறும் அவர் தெரிவித்தார்.
தேசத் தந்தைக்கு எதிராக தரக்குறைவான வார்த்தையை பயன்படுத்தியது மிகப்பெரிய குற்றம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X