search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கோப்புப் படம்
    X
    கோப்புப் படம்

    ராஜஸ்தானில் போர் விமானம் விழுந்து நொறுங்கியதில் விமானி பலி

    ராஜஸ்தானில் இந்திய விமானப் படைக்கு சொந்தமான மிக் 21 ரக போர் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது.
    ஜெய்ப்பூர்: 

    ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்சால்மர் பகுதியில் இந்திய விமானப் படைக்குச் சொந்தமான போர் விமானம் இன்று இரவு 8.30 மணிக்கு விழுந்து விபத்துக்கு உள்ளானது.

    சாம் காவல் நிலையத்தின் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள நேஷனல் பார்க் என்ற இடத்தின் அருகே விமானம் விபத்தில் சிக்கியுள்ளது. இந்த விபத்தில் விமானி ஹர்ஷித் சின்ஹா உயிரிழந்தார் என விமானப்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு உள்ளூர் போலீசார் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

    Next Story
    ×