என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
பீட் மாவட்டத்தில் 400 பேரால் சிறுமி கற்பழிக்கப்பட்ட கொடூரம்
Byமாலை மலர்11 Dec 2021 2:31 AM GMT (Updated: 11 Dec 2021 2:31 AM GMT)
சிறுமி கற்பழிக்கப்பட்ட சம்பவத்தில் போலீசார் நடத்திய விசாரணையில் நெஞ்சை உறைய வைக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
பீட் :
பீட் மாவட்டத்தை சேர்ந்த 13 வயது சிறுமியை பெற்றோர் கட்டாயப்படுத்தி வாலிபர் ஒருவருக்கு திருமணம் செய்து வைத்தனர். ஆனால் கணவரின் நடவடிக்கை பிடிக்காமல் அந்த சிறுமி பெற்றோர் வீட்டிற்கு திரும்பி வந்தாள்.
இதனால் சிறுமியின் தந்தை துன்புறுத்தியதால் கடந்த மே மாதம் வீட்டை வீட்டு வெளியேறினாள். அம்பேஜோகைய் பஸ் நிலையம் அருகே தங்கி இருந்த சிறுமியை பலர் கற்பழித்ததாக தெரியவந்தது.
இது தொடர்பாக போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து 15 பேரை கைது செய்து இருந்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 8 பேரை கடந்த 8-ந் தேதி போலீசார் கைது செய்தனர். இதில் ஓய்வு பெற்ற அரசு அதிகாரி, விடுதி உரிமையாளர், போலீஸ்காரர் மற்றும் ஊர்க்காவல்படை வீரர் ஆகியோர் அடங்குவர். கைது செய்யப்பட்ட 8 பேரையும் நேற்று முன்தினம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது அவர்களை 5 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்த நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் இது வரையில் கைது செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 23-ஆக உயர்ந்து உள்ளது.
இதற்கிடையே போலீசார் நடத்திய விசாரணையில் நெஞ்சை உறைய வைக்கும் அதிர்ச்சி தகவல் வெளியானது. அதாவது கடந்த 2 மாதத்தில் 400-க்கும் மேற்பட்டோர் சிறுமியை பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாக்கியது தெரியவந்தது. இதில் 2 போலீசாரும் அடங்குவர்.
இது தொடர்பாக போலீசார் விசாரணையை முடுக்கி விட்டு உள்ளனர். சிறுமியின் வாழ்க்கையை சீர்குலைத்த மற்ற காமுகர்களை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
பீட் மாவட்டத்தை சேர்ந்த 13 வயது சிறுமியை பெற்றோர் கட்டாயப்படுத்தி வாலிபர் ஒருவருக்கு திருமணம் செய்து வைத்தனர். ஆனால் கணவரின் நடவடிக்கை பிடிக்காமல் அந்த சிறுமி பெற்றோர் வீட்டிற்கு திரும்பி வந்தாள்.
இதனால் சிறுமியின் தந்தை துன்புறுத்தியதால் கடந்த மே மாதம் வீட்டை வீட்டு வெளியேறினாள். அம்பேஜோகைய் பஸ் நிலையம் அருகே தங்கி இருந்த சிறுமியை பலர் கற்பழித்ததாக தெரியவந்தது.
இது தொடர்பாக போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து 15 பேரை கைது செய்து இருந்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 8 பேரை கடந்த 8-ந் தேதி போலீசார் கைது செய்தனர். இதில் ஓய்வு பெற்ற அரசு அதிகாரி, விடுதி உரிமையாளர், போலீஸ்காரர் மற்றும் ஊர்க்காவல்படை வீரர் ஆகியோர் அடங்குவர். கைது செய்யப்பட்ட 8 பேரையும் நேற்று முன்தினம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது அவர்களை 5 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்த நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் இது வரையில் கைது செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 23-ஆக உயர்ந்து உள்ளது.
இதற்கிடையே போலீசார் நடத்திய விசாரணையில் நெஞ்சை உறைய வைக்கும் அதிர்ச்சி தகவல் வெளியானது. அதாவது கடந்த 2 மாதத்தில் 400-க்கும் மேற்பட்டோர் சிறுமியை பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாக்கியது தெரியவந்தது. இதில் 2 போலீசாரும் அடங்குவர்.
இது தொடர்பாக போலீசார் விசாரணையை முடுக்கி விட்டு உள்ளனர். சிறுமியின் வாழ்க்கையை சீர்குலைத்த மற்ற காமுகர்களை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X