search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    எதிர்க்கட்சி எம்.பி.க்கள்
    X
    எதிர்க்கட்சி எம்.பி.க்கள்

    சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு எதிர்ப்பு: கருப்புப்பட்டை அணிந்து காங்கிரஸ் எம்.பி.க்கள் பங்கேற்பு

    மாநிலங்களவை எம்.பி.க்கள் 12 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நடவடிக்கையை கண்டித்து 12 உறுப்பினர்கள் உள்பட எதிர்க்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    12 மாநிலங்களவை எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாராளுமன்ற வளாக பகுதியில் அமைந்துள்ள காந்தி சிலை அருகே தரையில் அமர்ந்து அவர்கள் போராட்டம் நடத்தினர்.

    இந்த போராட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பங்கேற்றார். கைகளில் பதாகைகளை ஏந்தியவாறு கோஷமிட்ட உறுப்பினர்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்யும் வகையில் கையில் கருப்புப்பட்டை அணிந்தவாறு இந்த போராட்டத்தில்  பங்கேற்றனர்.   பின்னர் பிற காங்கிரஸ் உறுப்பினர்கள் மாநிலங்களவை நடவடிக்கையில் கையில் கருப்புப்பட்டை அணிந்து பங்கேற்றனர்.

    இதனிடையே குளிர்கால கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகளின் வியூகங்களை எதிர்கொள்வது குறித்து பிரதமர் மோடி இன்று மூத்த அமைச்சர்களுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார். 
    Next Story
    ×