என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மாநிலங்களிடம் 12 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் கையிருப்பு: மத்திய அரசு
Byமாலை மலர்24 Oct 2021 6:20 AM GMT (Updated: 24 Oct 2021 6:20 AM GMT)
இந்தியாவில் 100 கோடிக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட நிலையில், 12 கோடி தடுப்பூசி டோஸ்கள் மாநிலங்களிடம் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசிகள் அதிக அளவில் செலுத்தப்படுகின்றன. குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் ஒவ்வொருவரும் இரண்டு டோஸ்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்.
தற்போது இந்தியாவில் 100 கோடிக்கும் அதிகமான டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. முதல் டோஸ் எடுத்துக் கொண்ட அனைவரும் குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் 2-வது டோஸ் முழுவதுமாக எடுத்துக் கொள்ளவில்லை. 2-வது டோஸ் செலுத்திக் கொள்ள தகுதியான நபர்களுக்கு தடுப்பூசி செலுத்த மாநில அரசுகள் கவனம் செலுத்தி வருகின்றன.
இந்த நிலையில் இந்தியாவில் இதுவரை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு 106.79 கோடி தடுப்பூசிகள் வழங்கியுள்ளோம். தற்போது 12 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடம் உள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X