என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பெட்ரோல் விலை தற்போது மிகக் குறைவாக உள்ளது - உ.பி. பாஜக மந்திரி சர்ச்சை பேச்சு
Byமாலை மலர்21 Oct 2021 11:55 PM GMT (Updated: 21 Oct 2021 11:55 PM GMT)
இந்தியாவில் 95 சதவீத மக்களுக்கு பெட்ரோல் தேவையில்லை என உத்தர பிரதேச பாஜக மந்திரி உபேந்திர திவாரி தெரிவித்தார்.
லக்னோ:
உத்தர பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், உத்தர பிரதேச அரசில் மந்திரியாக செயல்பட்டு வரும் உபேந்திர திவாரி, நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் பெட்ரோல் விலை உயர்வு தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த மந்திரி உபேந்திர திவாரி, இந்தியாவில் ஒரு சிலரே 4 சக்கர வாகனம் பயன்படுத்துகின்றனர். அவர்களுக்கு மட்டுமே பெட்ரோல் தேவைப்படுகிறது. நாட்டில் 95 சதவீத மக்களுக்கு பெட்ரோல் தேவையில்லை.
பொதுமக்களுக்கு 100 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் இலவசமாக செலுத்தப்பட்டுள்ளது. பெட்ரோல் விலையை தனிநபர் வருமானத்துடன் ஒப்பிட்டால் பெட்ரோல் விலை தற்போது மிகக் குறைவாக உள்ளது என தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்...உத்தரகாண்டில் கனமழை- பனிச்சிகரத்தில் 5 சுற்றுலாப் பயணிகள் உயிரிழப்பு
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X