என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்புப்படை- பயங்கரவாதிகள் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை
Byமாலை மலர்16 Oct 2021 9:28 AM GMT (Updated: 16 Oct 2021 9:28 AM GMT)
காஷ்மீரில் கடந்த 8-ந்தேதிக்குப்பிறகு 11 பயங்கரவாதிகள் 9 என்கவுண்டர் சம்பவங்களில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் துப்பாக்கிச்சண்டை அடிக்கடி நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தி வரும் பயங்கரவாதிகளை பாதுகாப்புப்படையினர் வேட்டையாடி வருகின்றனர்.
இன்று புல்வாமா மாவட்டம் பாம்போர் பகுதியின் டிரங்பால் என்ற இடத்தில் பாதுகாப்புப்படை வீரர்களுக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையில் துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருகிறது. எல்.இ.டி. கமாண்டர் உமர் முஸ்டாக் காண்டே சுற்றி வளைக்கப்பட்டுள்ளார். இவர் போலீசார் அதிகாரிகளை கொலை செய்த மற்றும் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டுள்ளார்.
மூன்று மாடி கட்டிடத்தில் இரண்டு பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளதால், நடவடிக்கை சற்று தாமதமாகியுள்ளது. ஆனால், சண்டை நடைபெற்று கொண்டே வருகிறது. இரண்டு பயங்கரவாதிகளையும் சுட்டுக்கொலை செய்து விடுவோம்.
கடந்த 8-ந்தேதிக்குப்பிறகு 9 என்கவுண்டர் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இதில் 11 பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளனர் என்று காஷ்மீர் ஐ.ஜி.பி. விஜய் குமார் தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X