என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தசரா ஊர்வலத்திற்குள் அதிவேகத்தில் புகுந்த வாகனம்- ஒருவர் பலி
Byமாலை மலர்15 Oct 2021 12:22 PM GMT (Updated: 15 Oct 2021 12:22 PM GMT)
ஊர்வலத்தில் புகுந்து உயிர்ச்சேதம் ஏற்படுத்திய வாகனத்தின் டிரைவரை பொதுமக்கள் பிடித்து சரமாரியாக தாக்கினர்.
ராய்ப்பூர்:
சத்தீஸ்கர் மாநிலம் ஜாஸ்பூர் மாவட்டம் பாதல்கானில் இன்று தசரா ஊர்வலம் உற்சாகமாக நடைபெற்றுக்கொண்டிருந்தது. அப்போது, அந்த சாலையில் அதிவேகமாக வந்த வாகனம் ஒன்று, ஊர்வலத்தில் வந்தவர்கள் மீது மோதியது. இதனால் பலர் தூக்கி வீசப்பட்டனர். ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர். அவர்கள் பாதல்கான் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ரத்தத்தை உறையவைக்கும் இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஊர்வலத்தில் புகுந்து உயிர்ச்சேதம் ஏற்படுத்திய வாகனத்தின் டிரைவரை பொதுமக்கள் பிடித்து சரமாரியாக தாக்கினர். வாகனத்தையும் அடித்து நொறுக்கி தீ வைத்துள்ளனர். இந்த சம்பவத்தால் பாதல்கானில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
லக்கிம்பூரில் போராடிய விவசாயிகள் மீது வாகனம் மோதி உயிரிழப்பை ஏற்படுத்தியதுபோன்று இந்த சம்பவமும் நடந்திருக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X