என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் முக்கிய பயங்கரவாதி சுட்டுக்கொலை
Byமாலை மலர்13 Oct 2021 5:03 PM GMT (Updated: 13 Oct 2021 5:03 PM GMT)
ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் முக்கிய உள்ளூர் தளபதியான ஷமிம், 2004இல் முதன்முதலில் கைது செய்யப்பட்டு 2 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டதாக ஐஜி தெரிவித்தார்.
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீர் மாநிலம் அவந்திபோரா மாவட்டம் டிரால் பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் அடங்கிய கூட்டுப்படையினர் அங்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது நடந்த துப்பாக்கிச் சண்டையில் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கத்தின் முக்கிய கமாண்டரான ஷமிம் சோபி அகா ஷாம் சோபி கொல்லப்பட்டான். இத்தகவலை காஷ்மீர் ஐஜி விஜய் குமார் உறுதி செய்தார்.
ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் முக்கிய உள்ளூர் தளபதியான ஷமிம், 2004இல் முதன்முதலில் கைது செய்யப்பட்டு பொது பாதுகாப்பு சட்டத்தின்கீழ் 2 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டதாகவும், சிறையிலிருந்து வெளியே வந்த பிறகு மீண்டும் பயங்கரவாத செயலில் ஈடுபட்டு வந்ததாகவும் ஐஜி தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X